

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவர் இயக்குநர் இமயம் பாரதி ராஜா. கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இயக்குநரும், நடிகருமான பாரதிராஜாவின் உயிர் நேற்று காலை பிரிந்தது. அவரது மறைவு தமிழ் திரையுலகினரை பெரும் அதிர்ச்சி மற்றும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா மறைவு குறித்து நடிகர் சிலம்பரசன் எக்ஸ் தலத்தல் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "பாரதிராஜா சாரின் மறைவு செய்தியை கேட்டு மனம் நொறுங்கி போனேன். அவருடன் பணியாற்றும் பாக்கியம் எனக்கு கிடைத்தது, அந்த நினைவுகளை நான் என்றும் போற்றிப் பாதுகாப்பேன். அவரது அன்பும், எளிமையும், சினிமா மீதான பேரார்வமும் அவரைச் சுற்றியிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது.
தனது கதை சொல்லும் திறனால் பல தலைமுறையினருக்கு அவர் உத்வேகம் அளித்தார். அவர் தாக்கம் செலுத்திய எண்ணற்ற வாழ்க்கை மற்றும் திரைப்படங்கள் மூலம் அவரது மரபு தொடர்ந்து நிலைத்திருக்கும். இவரது இழப்பால் துயருறும் குடும்பத்தினர், நண்பர்கள், சக பணியாளர்கள் மற்றும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் ஐயா," என குறிப்பிட்டள்ளார்.