வீட்டு முன் இருந்த பெரிய மரத்தை வெட்டியதாக நடிகர் ரிஷிகபூர் மீது வழக்கு

வீட்டுக்குள் இருந்த பெரிய மரத்தை வெட்டியதாக நடிகர் ரிஷிகபூர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த செய்தியை விரிவாக பார்ப்போம்.
ரிஷிகபூர் வீட்டில் வெட்டப்பட்ட மரம் மொட்டையாக காட்சி அளிக்கிறது.
ரிஷிகபூர் வீட்டில் வெட்டப்பட்ட மரம் மொட்டையாக காட்சி அளிக்கிறது.
Published on

தொடர்ந்து ஏராளமான வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகரானார். தற்போது 64 வயதாகும் ரிஷிகபூர் பந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பாலிஹில் பகுதியில் உள்ள பங்களாவை மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான கட்டுமானப்பணிக்கு காண்டிராக்ட் விட்டு இருந்தார்.

அப்போது பங்களாவின் ஒரு ஓரத்தில் வளர்ந்து இருந்த மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டது. மரத்தின் அடிப்பகுதி மட்டும் மொட்டையாக நின்றது.

இது பற்றி மும்பை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினார்கள். ரிஷிகபூர் கூறும் போது, மரத்தின் கிளைகள் பக்கத்து வீடுகளுக்கு இடையூறாக இருந்ததால் அதன் கிளைகள் மட்டும் வெட்டப்பட்டது, அதற்கு உரிய அனுமதி பெற்று இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் அதிகாரிகள் கூறும் போது, மரத்தை வெட்டியது சட்ட விரோதம். ரிஷிகபூரின் விளக்கம் ஏற்புடையது அல்ல என்றனர்.


இதையடுத்து ரிஷிகபூர் மீது மும்பை போலீசில் முறைப்படி புகார் செய்யப்பட்டது. போலீசார் அவர் மீது மராட்டிய மாநில மரம் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது பற்றி சமூக ஆர்வலர்கள் கூறும் போது, மும்பையில் இது போன்று மரங்கள் வெட்டப்படும் சம்பவம் நிறைய நடக்கிறது. மும்பை கலெக்டர் அலுவலகத்தின் அருகில் கூட மரத்தை வெட்டினார்கள்.

இது பற்றி புகார் செய்தேன் யாரும் கண்டு கொள்ளவில்லை . ஆனால் பிரபல நடிகர் சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்றதும் உடனே நடவடிக்கை எடுக்கிறார்கள். இதில் யாருக்கும் பாரபட்சம் காட்டக்கூடாது என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com