மகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு

ரூ.1000 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ள மகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு
Published on

ஸ்ரீகுமார் மேனன் இயக்கவுள்ள இப்படத்தில், மகாபாரத் கதையில் வரும் பீமன் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கவுள்ளதாக முன்னதாக பார்த்திருந்தோம். இந்நிலையில், தெலுங்கில் முன்னணி நடிகராக வலம்வரும் நாகர்ஜுனாவும் இப்படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த நாகர்ஜுனா தெரிவித்ததாவது,

"நான் தற்போது `ராஜு கரி கதீ-2' படத்தில் நடித்து வருகிறேன். எனது அடுத்த படம் மகாபாரதக் கதையாக இருக்கலாம். கடந்த 4 வருடங்களாக மகாபாரதக் கதையை இயக்க, கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும், ஸ்ரீகுமார் 2 வருடங்களுக்கு முன்பே, கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க என்னிடம் கேட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது என்னை தொடர்பு கொண்ட வாசுதேவன் மகாபாரதக் கதையில் நடிப்பதற்காக எனது தேதிகளை கேட்டிருக்கிறார். படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால், நான் நடிக்க தயார் என்று கூறினேன். அதற்கு பதில் அளித்த வாசுதேவன், எனக்கு முக்கிய கதாபாத்திரம் ஒதுக்கவுள்ளதாக கூறினார். இதுகுறித்து படக்குழு என்னை மீண்டும் தொடர்பு கொள்ளும் போது அதிகாரப்பூர்வ தகவலை தெரிவிக்கிறேன்"

இவ்வாறு நாகர்ஜுனா தெரிவித்துள்ளார்.

இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் நேரடியதக வெளியாக உள்ளது. 2018-ல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

அமிதாப் பச்சன், கமல் உள்ளிட்டோரும் நடிக்கவிருப்பதாக வெளியான செய்திகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் கிடைக்கவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com