கனவுகளோடு சென்னை வரும் இளைஞர்கள் பற்றிய கதை கன்னி மாடம் - போஸ் வெங்கட்

நடிகர் போஸ் வெங்கட் கன்னி மாடம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனவுகளோடு சென்னை வரும் இளைஞர்கள் பற்றிய கதை கன்னி மாடம் - போஸ் வெங்கட்
Published on

‘ஈரநிலம்’ படத்தில் அறிமுகமாகி 60-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்திருப்பவர், போஸ் வெங்கட். இவர் இயக்குனராக அறிமுகமாகும் படத்துக்கு ‘கன்னிமாடம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு 35 நாட்களில் முடிந்தது. இதுபற்றி அவர் கூறியதாவது:-

“தயாரிப்பாளர் ஹஷீரின் முழு ஆதரவு இல்லாவிட்டால், 35 நாட்களில் படப்பிடிப்பை முடித்து இருக்க முடியாது. அவர் படைப்பு சுதந்திரத்தில் தலையிடவே இல்லை. ‘கன்னிமாடம்’ படம் மெட்ராஸ் என்றால் என்ன? என்பதை வரையறுக்கும். சாதிக்க நினைக்கும் கனவுகளோடு சென்னைக்கு வரும் இளைஞர்களை பற்றிய கதை, இது.

மேட்டுக்குப்பம், விஜயராகவபுரம், சூளைமேடு ஆகிய இடங்களில் அவர்கள் தங்குவது, பொதுவான விஷயம். இதற்காக சென்னையில் அந்த 3 இடங்களிலும் படப்பிடிப்பை நடத்தினோம். ஸ்ரீராம், காயத்ரி ஆகிய இருவரும் கதைநாயகன்-நாயகியாக நடித்துள்ளனர். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, படத்தொகுப்பு, குரல் சேர்ப்பு, பின்னணி இசை சேர்ப்பு ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.” என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com