மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய திவ்யா ஸ்பந்தனா

தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்த திவ்யா ஸ்பந்தனா, தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.
திவ்யா ஸ்பந்தனா
திவ்யா ஸ்பந்தனா
Published on

குத்து படத்தில் அறிமுகமானவர் ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா. தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்த திவ்யா ஸ்பந்தனா, இப்போது சினிமாவுக்கு திரும்பியிருக்கிறார். சமீபத்தில் கன்னடத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். தில் கா ராஜா என்ற கன்னட படத்தில், பிரஜ்வால் தேவராஜ் ஜோடியாக அவர் நடித்துள்ளார். இப்படத்தை சோம்நாத் இயக்கியுள்ளார். 

இனி தமிழ், தெலுங்கிலும் நடிப்பில் தீவிர கவனம் செலுத்த திவ்யா முடிவு செய்துள்ளாராம். அதற்காக தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளார். இவர் ஏற்கனவே தனுஷுடன் பொல்லாதவன், சிம்புவுடன் குத்து, ஜீவாவுடன் சிங்கம்புலி போன்ற படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com