ஆதிக்கு நன்றி தெரிவித்த அஸ்வின்

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நட்பே துணை படத்தில் நடித்த அஸ்வின், கதாநாயகன் ஆதிக்கு நன்றி தெரிவித்துள்ளார். #NatpeThunai
ஆதிக்கு நன்றி தெரிவித்த அஸ்வின்
Published on

சமீபத்தில் வெளியான நட்பே துணை படத்தில் ஹாக்கி பிளேயர் ஆசிப் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டுதலை பெற்றவர் அஸ்வின். நெகடிவ் கதாபாத்திரம் போன்று ஆரம்பமாகி பின்னர் பாசிடிவ் கதாபாத்திரம் ஆதியின் நண்பராக நடித்திருந்தார்.

இப்படம் குறித்து அஸ்வின் கூறும்போது, ‘நான் சிங்கப்பூரில் மாஸ்டர் ஆப் பிஸினஸ் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்து விட்டு ஒரு ஹோட்டல் நிறுவனத்தில் உயரிய பொறுப்பில் இருந்தேன். கை நிறைய சம்பளம். கெளரவமான வேலை. அத்துடன் டான்ஸ் ஸ்கூல், ஜிம் என்று நடத்திக் கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில் யானும் தீயவன் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. என் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. படம் வெளியான நேரத்தில் பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. அதனால் படத்திற்கு வெற்றி கிடைக்காமல் போனது.

அதன்பின் பஞ்சாட்சரம் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்தேன். அந்தப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. பின்னர் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றேன். அதற்கான பரிசு நட்பே துணை படத்தில் கிடைத்தது. எனக்கு ஒரு நல்ல கேரக்டர் கொடுத்து என் வாழ்க்கைகு ஒரு நல்ல இடத்தை ஏற்படுத்தி கொடுத்த ஆதிக்கு நான் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். அதே மாதிரி தயாரிப்பாளர் சுந்தர்.சி சாருக்கும் குஷ்பு மேடத்துக்கும் நன்றியை சொல்லிக் கொள்கிறேன். 

என்னோட அப்பா ஜெரோம் புஷ்பராஜ் ஒரு லாயர்...அதோடு இல்லாமல் மியூசிக் டைரக்டர். அதனால் எனக்கு மியூசிக் ஆர்வம் அதிகம் நிறைய மியூசிக் ஆல்பங்களை தயாரித்திருக்கிறேன். இப்போ வெப் சீரியல்களை தயாரித்து இயக்கிக் கொண்டிருக்கிறேன். எனக்கும் இந்த கலைத்துறையில் மதிப்பு மிக்க இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com