புதிய அவதாரம் எடுத்த ஆர்யா பட நாயகி

ஆர்யா நடிப்பில் வெளியான ‘கலாபக்காதலன்’ படம் மூலம் பிரபலமான நடிகை தற்போது, ‘யாளி’ படம் மூலம் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். #Akshaya
புதிய அவதாரம் எடுத்த ஆர்யா பட நாயகி
Published on

ஆர்யா நடித்த கலாபக்காதலன் படம் மூலம் புகழ் பெற்றவர் நடிகை அக்‌ஷயா. இப்படத்தை தொடர்ந்து விஜயகாந்த் நடித்த ‘எங்கள் ஆசான்’, டாக்டர் கலைஞர் கதை, வசனம் எழுதிய ‘உளியின் ஓசை’, போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது ‘யாளி’ என்ற படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இந்தப் படத்தில் தமன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக அக்‌ஷயாவே நடித்திருக்கிறார். இவர்களுடன் ஊர்வசி, மனோபாலா இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் என்ற புதுமுகம் நடித்திருக்கிறார்.

இப்படம் பற்றி இயக்குனரும், நாயகியுமான அக்‌ஷயா கூறும்போது, ‘பெண் இயக்குனர்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போது நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வரிசையில் நான் இணைந்துள்ளேன். இது ஒரு ரொமான்டிக், திரில்லர் படமாக உருவாக்கி இருக்கிறோம். மும்பை பின்னணியில் நடக்கும் கதை. 

முக்கியமான மூன்று கதாபாத்திரங்களை சுற்றி திரைக்கதை நகரும். நாயகி ஜனனி (அக்‌ஷயா ), நாயகன் (தமன்) இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு தொடர்பு இல்லாத பாலா (அர்ஜுன்) என்ற கதாபாத்திரம் ஜனனியை பின்தொடர்கிறார். யார் அவர் எதற்காக ஜனனியை பின் தொடர்கிறார், அந்த நேரத்தில் மும்பையில் தொடர் கொலை சம்பவங்கள் வேறு நடக்கின்றன. அந்த கொலை சம்பவங்களுக்கும் இந்த மூன்று கதாபாத்திரத்திரங்களுக்கும் என்ன தொடர்பு இறுதியில் ஜனனி என்ன ஆனார் என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

படப்பிடிப்பு மும்பை, மலேசியா, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றது. ஜூன் மாதம் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. ஜூலை மாதம் படம் திரைக்கு வர உள்ளது என்கிறார் அக்‌ஷயா.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com