சண்டக்கோழி 2 பாடலுக்காக ஒரு புத்தகத்தையே எழுதிய அருண் பாரதி

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் `சண்டக்கோழி 2' படத்தில் மீசைவச்ச வேட்டைக்காரன் பாடலுக்காக பாடலாசிரியர் அருண்பாரதி ஒரு புத்தகத்தையே எழுதியிருப்பதாக கூறினார். #Sandakozhi2 #ArunBharathi
சண்டக்கோழி 2 பாடலுக்காக ஒரு புத்தகத்தையே எழுதிய அருண் பாரதி
Published on

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் `சண்டக்கோழி-2' படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் சமீபத்தில் வெளியான பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த படத்தில் `மீசவச்ச வேட்டக்காரன்' என்ற ஒரு பாடலை எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் அருண்பாரதி.

இந்த பாடல் பற்றி அருண்பாரதி கூறிய போது, 

மீசைவச்ச வேட்டைக்காரன் பாடலுக்கு நான் பல வரிகளை எழுதிக்கொடுத்தேன். எங்க அப்பா, ராஜ்கிரண் ரசிகர் என்பதால் எனக்கும் அவரை பிடிக்கும். அதனாலேயே அவருக்காக " நல்லி எலும்போட அடுப்புலதான் வெள்ளாடு மெதக்குதய்யா; அத அள்ளிக் கடிக்கத்தான் அடிவயிறு தண்டோரா அடிக்குதய்யா " என்ற வரிகளை எழுதினேன். மேலும் விஷாலுக்காக " நம்ம தான் நம்ம தான் கருப்பு தங்கம் யாருக்கும் அடங்காத மதுர சிங்கம் திமிருதான் திமிருதான் நம்ம ரத்தம் நாம திமுருனா திரும்புமே ஊரு மொத்தம் " என பாடல் வரிகளை எழுதினேன். 

மேலும் இந்தப் பாடலுக்காக நான் எழுதிய எல்லாமே இயக்குனருக்கு பிடிச்சுருந்துச்சு. எல்லாத்தையும் வைக்கமுடியாது என்பதால் சிலவற்றை மட்டும் இந்த பாடலில் பயன்படுத்தி உள்ளோம். இந்த பாடல்களுக்காக நான் எழுதிய வரிகளை வைத்து ஒரு புத்தகமே வெளியிடலாம் அந்த அளவுக்கு ஒரு பத்து திருவிழா பாடலுக்கான வரிகள் உள்ளது சீக்கிரமே அதை புத்தகமாக வெளியிட உள்ளேன் என்றார். #Sandakozhi2 #ArunBharathi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com