தமிழ் படங்களை மீண்டும் கலாய்க்க வரும் `தமிழ்படம் 2.0'

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான தமிழ்படம் படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் உருவாக இருப்பதாக படத்தின் இயக்குநர் அறிவித்துள்ளார்.
தமிழ் படங்களை மீண்டும் கலாய்க்க வரும் `தமிழ்படம் 2.0'
Published on

இந்த படத்தை தொடர்ந்து அமுதன் அடுத்ததாக `இரண்டாவது படம்' என்ற தலைப்பில் புதிய படத்தை இயக்கி வந்தார். விமல், அரவிந்த் ஆகாஷ், ரிச்சர்டு, விஜயலக்‌ஷ்மி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலரும் நடித்து வந்த இப்படம் சில பிரச்சனைகளால் ரிலீசாகாமல் உள்ளது.

இந்நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை இயக்குநர் அமுதன் வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்ததாவது, `தமிழ் படம் இரண்டாவது பாகம் 2.0' விரைவில் உருவாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். இதன் இரண்டாவது பாகத்திலும் சிவாவே நடிக்க இருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com