மணிரத்னம் படத்தின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்துவேன் - ஐஸ்வர்யா ராஜேஷ்

‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய விஷயம் என்று கூறியிருக்கிறார். #CCV
மணிரத்னம் படத்தின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்துவேன் - ஐஸ்வர்யா ராஜேஷ்
Published on

‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் தமிழ் பட உலகில் அடையாளம் காணப்பட்டவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர், தற்போது தனுசுடன் ‘வடசென்னை’, விக்ரமுடன் ‘துருவநட்சத்திரம்’, மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச்சிவந்த வானம்’ படங்களில் நடித்து வருகிறார்.

“ ‘வடசென்னை’ படத்தில் குப்பத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். நானும் சென்னைப்பெண். எனவே, சென்னை தமிழ்பேசி நடித்ததில் எந்த கஷ்டமும் தெரியவில்லை. கவுதம்மேனனின் ‘துருவநட்சத்திரம்’ படத்தில் நடிக்கும் போது, ஆரம்பத்தில் சில நாட்கள் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. பின்னர் கவுதம்மேனன் பாணிக்கு என்னை மாற்றிக்கொண்டேன். இப்போது அப்படி நடிக்க பழகிவிட்டது.

மணிரத்னம் சார் படத்தில் நடிப்பதை எனது திரை உலக பயணத்திலேயே பெரிய வி‌ஷயமாக கருதுகிறேன். அவருடைய படத்தில் ஒரு காட்சியில் நடிக்க வேண்டும் என்று என்னை அழைத்து இருந்தாலும் நடித்திருப்பேன். இந்த படத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வேடத்தை எனக்கு கொடுத்திருக்கிறார். அது என்ன என்பதை இப்போது சொல்ல முடியாது. நிச்சயம் இது பேசப்படும் பாத்திரமாக இருக்கும்” என்றார். #CCV #AishwaryaRajesh

X

Maalai Malar
www.maalaimalar.com