நடிகை சஞ்சனாவின் நிர்வாண வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு

கன்னட நடிகை சஞ்சனா நிர்வாணமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை சஞ்சனாவின் நிர்வாண வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு
Published on

கர்நாடக மாநிலம் தண்டுபாளையா பகுதியை சேர்ந்தவர்கள், பெண்களை கற்பழித்து கொலை செய்வது, நகைகளை கொள்ளையடிப்பது போன்ற கொடூரமான சம்பவங்களில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக தண்டுபாளையா என்ற பெயரில் கன்னடத்தில் சினிமா படம் எடுக்கப்பட்டது. அந்த படத்தில் பிரபல கன்னட நடிகை பூஜாகாந்தி நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் ஒரு காட்சியில் அரை நிர்வாணமாக நடித்திருந்தார். இது கர்நாடகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனாலும் தண்டுபாளையா படம் கர்நாடகத்தில் வெற்றிகரமாக ஓடியது.

இதனால் தண்டுபாளையா படத்தின் அடுத்த பாகமாக தண்டுபாளையா-2 என்ற படம் தயாரிக்கப்பட்டு தற்போது கர்நாடகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கன்னட நடிகை சஞ்சனா நடித்துள்ளார். இந்த நிலையில், நடிகை சஞ்சனாவை சிறையில் இருப்பது போன்றும், அவரை போலீஸ் அதிகாரி துன்புறுத்துவது போலவும், அவரது கைகள் கட்டப்பட்டு நிர்வாணமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தண்டுபாளையா-2 படத்திற்காக அந்த காட்சிகள் எடுக்கப்பட்டதாகவும், அதில், நடிகை சஞ்சனா நடித்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் தண்டுபாளையா-2 படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பிய போது, நடிகை சஞ்சனா நிர்வாணமாக நடித்திருப்பது போன்ற சில காட்சிகள் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அந்த காட்சிகள் தான் சமூக வலைதளங்களில் வெளியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து நடிகை சஞ்சனா கூறியதாவது:-

நான் நிர்வாணமாக இருப்பது போன்ற சில வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இதனை நான் எதிர்பார்க்கவில்லை. அது எப்படி? வெளியானது என்று தெரியவில்லை. இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பாளர், இயக்குனரிடம் கேட்டுள்ளேன். அவர்கள் ஆந்திராவில் இருப்பதால், இந்த விவகாரம் பற்றி இன்னும் 2 நாட்களில் முழு விபரங்களை தெரிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com