அஜித்திடம் மறுபடியும் பேச முடியுமா என்று தெரியவில்லை - அபிராமி

பிக்பாஸ் வீட்டில் இருந்து தற்போது வெளிவந்திருக்கும் அபிராமி, அஜித்திடம் மறுபடியும் பேச முடியுமா என்று தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.
அஜித், அபிராமி
அஜித், அபிராமி
Published on

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’. இதில் முக்கியமான வேடத்தில் அபிராமி நடித்திருந்தார். படம் வெளியாகும் முன்பே பிக்பாஸ் வீட்டிற்கு சென்றார். 

தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த பின்னர் அபிராமி நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பு தளத்தில் அஜித் உடனான அனுபவங்களையும் கூறியுள்ளார். 

அவர் கூறியிருப்பதாவது: ‘படப்பிடிப்பில் எங்களின் முழு கவனமும் அஜித் மீதே இருக்கும். அவர் அதை பார்த்து விடுவார். பேசும் போதே அடிக்கடி ஜி ஜி என்று சொல்லுவார். எதற்கு ஜின்னு சொல்றீங்க. பேசாம அபிராமின்னு கூப்பிடுங்கன்னு சொன்னேன்.

அதற்கு அவரோ, மரியாதை எல்லாருக்கும் கொடுக்கணும் என்று சொல்வார். அஜித்திடம் மறுபடியும் பேச முடியுமா என்று தெரியவில்லை’ என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com