தவக்காலத்தையொட்டி சிலுவையுடன் ஊர்வலமாக சென்று கிறிஸ்தவர்கள் வழிபாடு

வாணாபுரம் அருகே உள்ள சதா குப்பம் அந்தோணியார் தேவாலயத்தில் இருந்து நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் சிலுவைகளை சுமந்து 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றனர்.
சிலுவையுடன் ஊர்வலமாக சென்று கிறிஸ்தவர்கள் வழிபாடு
சிலுவையுடன் ஊர்வலமாக சென்று கிறிஸ்தவர்கள் வழிபாடு
Published on

ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது. அடுத்த மாதம் புனிதவெள்ளி வர உள்ள நிலையில் தவக்காலம் தொடங்கி உள்ளது.

இதனையொட்டி ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் தேவாலயங்களில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெறுகிறது. வாணாபுரம் அருகே உள்ள சதா குப்பம் அந்தோணியார் தேவாலயத்தில் இருந்து நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் சிலுவைகளை சுமந்து 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றனர். தொடர்ந்து இறைமக்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர் .இதனையடுத்து அவர்கள் பெருந்துறைபட்டு தூய காணிக்கை அன்னை தேவாலயத்துக்கு சென்றனர். அங்கு பங்கு தந்தை வின்சென்ட்பவுல் தலைமையில் நடந்த கூட்டு திருப்பலியில் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com