சடையால் புதூர் கிறிஸ்து அரசர் ஆலய அர்ச்சிப்பு விழா இன்று நடக்கிறது

புதுப்பிக்கப்பட்டுள்ள சடையால் புதூர் கிறிஸ்து அரசர் ஆலய அர்ச்சிப்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடக்கிறது.
சடையால் புதூர் கிறிஸ்து அரசர் ஆலயம்
சடையால் புதூர் கிறிஸ்து அரசர் ஆலயம்
Published on

வெள்ளிச்சந்தை அருகே உள்ள சடையால்புதூரில் கிறிஸ்து அரசர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்டுள்ள ஆலயத்தில் அர்ச்சிப்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடக்கிறது.

விழாவில் கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட ஆலயத்தை அர்ச்சித்து வைக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை கிளேட்டன் தலைமையில் பங்கு அருட்பணி பேரவையினர், அருட்சகோதரிகள் கட்டிட பணிக்குழுவினர் பங்கு பேரவையினர் இனைந்து செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com