வெறும் 797 ரூபாய்க்கு 395 நாட்கள் வேலிடிட்டி.. பி.எஸ்.என்.எல் அறிமுகம் செய்துள்ள அட்டகாசமான திட்டம்

இந்த ரீசார்ஜ் திட்டத்தை பி.எஸ்.என்.எல் செல்ஃப் கேர் செயலி மூலம் ரீசார் செய்பவர்களுக்கு 4 சதவீதம் தள்ளுபடியும் உண்டு.
பி.எஸ்.என்.எல்
பி.எஸ்.என்.எல்
Published on

பி.எஸ்.என்.எல் நிறுவனம் புதிய ஆன்வெல் பிளான் வவுச்சரை அறிமுகம் செய்துள்ளது

இந்த திட்டத்தின் மூலம் ரூ.797-க்கு ரீசார்ஜ் செய்தால் முதல் 60 நாட்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி 2ஜிபி ஹைஸ்பீடு டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்கள் வழங்கப்படும். 

60 நாட்களுக்கு பிறகு அழைப்புகளும், டேட்டாவும் வழங்கப்படாது. ஆனால் வேலிடிட்டி மட்டும் அடுத்த 10 மாதங்களுக்கு செயல்பாட்டில் இருக்கும். டேட்டா மற்றும் அழைப்புகள் தேவைப்படுபவர்கள் தனியாக டாக்டைம் வவுச்சர்கள், டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்துகொண்டு மீதம் உள்ள நாட்களின் வேலிடிட்டியை பெறலாம்.

பி.எஸ்.என்.எல்லை இரண்டாவது சிம்மாக பயன்படுத்துபவர்களுக்கு இந்த திட்டம் பெறிதும் பயன் தரும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த திட்டத்தை ஜூன் 12-ம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டியுடன் சேர்த்து கூடுதலாக 30 நாட்கள் வேலிடிட்டியும் வழங்கப்படவுள்ளது.

இந்த ரீசார்ஜ் திட்டத்தைல் பி.எஸ்.என்.எல் செல்ஃப் கேர் செயலி மூலம் ரீசார் செய்பவர்களுக்கு 4 சதவீதம் தள்ளுபடியும் உண்டு.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com