இன்று பானு சப்தமி... விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்

இந்த நாள் சூரிய கிரகண நாளுக்கு இணையானது.இன்று விரதம் இருந்து தானம் செய்வது சிறப்பானது.
இன்று பானு சப்தமி... விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்
Published on

இன்று பானு சப்தமி தினமாகும். ஞாயிற்றுக்கிழமையும் சப்தமி திதியும் ஒன்று சேரும் நாள்தான் பானு சப்தமி. இந்த நாள் சூரிய கிரகண நாளுக்கு இணையானது. அதாவது பானு சப்தமி நாளில் நாம் செய்யும் பூஜைகள் மந்திர ஜபங்கள், ஹோமங்கள், தானங்கள் போன்றவை சாதாரண நாட்களில் செய்வதால் ஏற்படும் புண்ணியத்தை காட்டிலும் சுமார் ஆயிரம் மடங்கு அதிக புண்ணியத்தை தரக்கூடியவை.

இன்று காலையில் புண்ணிய நதிகளில் குளிப்பதும், சூரிய நமஸ்காரம் செய்வதும், காயத்ரி மந்திரம் சொல்வதும், ஆதித்ய இருதயம் போன்ற சூரிய மந்திர பாராயணம் செய்வதும், கோதுமை மாவால் செய்த இனிப்பு பட்சணங்களை தருவதும், தாமிரம் என்னும் செப்பு பாத்திரத்தில் வைத்த கோதுமையை தானம் செய்வதும், சூரியனின் அருளை பெற்றுத் தரும். மேலும் கண்களில் உள்ள கோளாறுகள் விலகும். உயர்ந்த பதவிகள் கிடைக்கும். தந்தைக்கு ஆரோக்கியம் கிட்டும்.

விரதம் இருந்து சூரிய வழிபாடு செய்வது நல்ல பலன்கள் கிடைக்க உதவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com