உற்பத்தியில் புது மைல்கல் எட்டிய டாடா நெக்சான்

இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்யுவி மாடல்களில் ஒன்றாக டாடா நெக்சான் இருக்கிறது.
டாடா நெக்சான்
டாடா நெக்சான்
Published on

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2 லட்சமாவது நெக்சான் மாடலை தனது உற்பத்தி ஆலையில் இருந்து வெளியிட்டுள்ளது. புது மைல்கல் பற்றிய அறிவிப்பை டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. தற்போது இந்தியாவில் விற்பனையாகும் எஸ்யுவிக்களின் முதல் மூன்று மாடல்களில் ஒன்றாக டாடா நெக்சான் இடம்பெற்று இருக்கிறது.

உலகின் முன்னணி ஆட்டோமொபைல் சந்தைங்களில் ஆறாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் அறிமுகமாகும் கார்கள் எண்ணிக்கையும், அதற்கேற்ற போட்டியும் பலமாகவே இருக்கிறது. இந்தியாவில் எஸ்யுவி பிரிவு அதிக போட்டி மிக்கதாக இருக்கிறது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்யுவி மாடல்களில் ஒன்றாக டாடா நெக்சான் இருக்கிறது. நெக்சான் மூலம் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை டாடா மோட்டார்ஸ் குறிவைத்தது. இந்த மாடல் இந்திய சந்தையில் பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com