மீண்டும் முன்பதிவை நிறுத்திய ரெவோல்ட்

ரெவோல்ட் ஆர்வி400 மாடலுக்கான முன்பதிவில் இரண்டு மணி நேரத்தில் ரூ. 50 கோடி மதிப்பிலான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ரெவோல்ட் ஆர்வி400
ரெவோல்ட் ஆர்வி400
Published on

ரெவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுக்கு அமோக வரவேற்பு கிடைத்து இருப்பதாக ரெவோல்ட் மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளது. அதிக முன்பதிவு காரணமாக இரண்டே மணி நேரங்களில் மீண்டும் முன்பதிவை நிறுத்தியதாக அந்நிறுவனம் தெரிவித்தது. இந்த காலக்கட்டத்தில் ரூ. 50 கோடி மதிப்பிலான யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் விலை குறைக்கப்பட்டதே அதிக வரவேற்புக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மத்திய அரசு பேம் 2 திட்டத்தில் மேற்கொண்ட மாற்றங்கள் காரணமாக இந்த மோட்டார்சைக்கிள் விலை குறைக்கப்பட்டது. இந்தியா முழுக்க சுமார் 35 நகரங்களில் விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களை திறந்துள்ளதாக ரெவோல்ட் தெரிவித்தது.

சமீபத்திய முன்பதிவில் டெல்லி, மும்பை, பூனே, சென்னை, ஆமதாபாத் மற்றும் ஐதராபாத் என இந்தியாவின் ஆறு நகரங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர். எப்போதும் போல் இந்த முறையும் ரெவோல்ட் ஆர்வி400 மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என ரெவோல்ட் மோட்டார்ஸ் தெரிவித்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com