ஐந்து நகரங்களில் விற்பனையை நீட்டிக்கும் ரெவோல்ட்

ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது விற்பனையை நீட்டிக்க திட்டமிட்டுள்ளது.
ரெவோல்ட் மோட்டார்சைக்கிள்
ரெவோல்ட் மோட்டார்சைக்கிள்
Published on

ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் கொல்கத்தா, கோயம்புத்தூர், மதுரை, விசாகபட்டினம் மற்றும் விஜய்வாடா என ஐந்து புதிய நகரங்களில் விற்பனையை நீட்டிக்க இருப்பதாக அறிவித்து உள்ளது. இதன் மூலம் ரெவோல்ட் மோட்டார்ஸ் நாடு முழுக்க 14 முக்கிய நகரங்களில் மொத்தம் 19 விற்பனை மையங்களை கொண்டிருக்கும்.

முன்னதாக அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் மூன்று நகரங்களில் விற்பனையை துவங்க இருப்பதாக ரெவோல்ட் மோட்டார்ஸ் அறிவித்தது. தொடர்ந்து பெட்ரோல் விலை அதிகரித்து வருவதை ஒட்டி எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. 

ரெவோல்ட் ஆர்.வி.400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் 72 வோல்ட், 3.24 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு அதிகபட்சம் 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com