4600 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் ரோல்ஸ் ராய்ஸ்

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் பயணியாற்றி வரும் ஊழியர்களில் சுமார் 4600 பேரை பணியில் இருந்து நீக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

லண்டன்:

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன சீரமைப்பு காரணமாக அந்நிறுவன ஊழியர்களில் 4600 பேரை பணி நீக்கம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேளாலர்கள், உதவியாளர் பதவியில் இருப்பவர்கள் இதில் பாதிக்கப்பட இருக்கின்றனர். 

இந்நிறுவனம் பொது வான்வெளி, பாதுகாப்பு மற்றும் மின்சக்கதி துறைகளில் மீண்டும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. மூன்றில் ஒரு பங்கு பணி நீக்கம் இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என ரோல்ஸ் ராய்ஸ் தெரிவித்துள்ளது. இது 2019-ம் ஆண்டில் தொடர்ந்து 2020-ம் ஆண்டு மத்தியில் நிறைவுறுகிறது.

இதற்கான செலவீனம் 50 கோடி யூரோ என கணக்கிடப்பட்டு இருக்கும் நிலையில், 2020-ம் ஆண்டு வாக்கில் நிறுவனத்துக்கு 40 கோடி யூரோக்களை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டென்ட் 1000 இன்ஜின் மூலம் பிரச்சனைகளை சரி செய்து கொள்ள ரோல்ஸ் ராய்ஸ் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்ஜின் பாகங்கள் எதிர்பார்த்தளவு இயங்காத காரணத்தால் சில விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அனைத்து இன்ஜின்களையும் சரி செய்ய சில ஆண்டுகள் ஆகும் என ரோல்ஸ் ராய்ஸ் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com