இந்தியாவில் ரீகால் செய்யப்படும் கியா செல்டோஸ்

கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது செல்டோஸ் மாடல் காரை இந்திய சந்தையில் ரீகால் செய்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
கியா செல்டோஸ்
கியா செல்டோஸ்
Published on

கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது செல்டோஸ் எஸ்யுவி டீசல் யூனிட்களை ரீகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. இந்த வேரியண்ட்டில் பியூவல் பம்ப்பில் கோளாறு கண்டறியப்பட்டதே ரீகால் செய்யப்படுவதற்கான காரணமாக கூறப்படுகிறது.

அக்டோபர் 2019 முதல் மார்ச் 2020 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கியா செல்டோஸ் டீசல் யூனிட்கள் ரீகால் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும், எத்தனை யூனிட்கள் ரீகால் செய்யப்படுகின்றன என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

வாடிக்கையாளர்கள் தங்களின் செல்டோஸ் டீசல் வேரியண்ட்டை அருகாமையில் உள்ள சர்வீஸ் மையம் கொண்டு சென்று காரை சரி செய்து திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இந்த கோளாறு இலவசமாக சரி செய்து வழங்கப்படுகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com