5500 கோடி ரூபாய் ஐபிஓ-க்கான செபியின் ஒப்புதலை பெற்றது ஓலா எலெக்ட்ரிக்

4.7 கோடி ரூபாய் பங்குகளை பவிஸ் அகர்வாலால் விற்பனை செய்யப்படும்.1226.4 கோடி ரூபாய் துணை நிறுவனத்தின் மூலதன செலவினங்களுக்கு பயன்படுத்தும்.
5500 கோடி ரூபாய் ஐபிஓ-க்கான செபியின் ஒப்புதலை பெற்றது ஓலா எலெக்ட்ரிக்
Published on

பவிஷ் அகர்வாலின் ஓலா எலெக்டரிக் நிறுவனம் இந்திய பங்கு சந்தையில் 5500 கோடி ரூபாய் மூலதனம் பெறுவதற்கான ஐபிஓ-க்கு செபி ஒப்புதல் வழங்கியது. செபியின் ஒப்புதலை பெறும் இந்தியாவின் முதல் ஸ்டார்ட்அப் எலெக்ட்ரிக் நிறுவனம் இதுவாகும். இது 9.51 கோடி பங்குகளை கொண்டதாகும்.

இதில் 4.7 கோடி ரூபாய் பங்குகளை பவிஸ் அகர்வாலால் விற்பனை செய்யப்படும். விளம்பர குரூப்பான இந்தூஸ் டிரஸ்ட் 41.78 லட்ச பங்குகளுக்கான உரிமையை வைத்துக்கொள்ளும்.

1226.4 கோடி ரூபாய் துணை நிறுவனத்தின் மூலதன செலவினங்களுக்கும், 800 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் என விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தது.

1600 கோடி ரூபாய் ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு மேம்பாட்டிற்கான முதலீடு செய்யப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் ரூ.350 கோடி இயற்கை வளர்ச்சி முயற்சிகளுக்கு பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனம் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ளது. கடந்த திங்கட்கிழமை பட்ஜெட் விலை தொடர்பான மாடலின் விலையில் 12.5 சதவீதம் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com