மந்த நிலை எதிரொலி - 16 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்தும் அசோக் லேலண்ட்

அசோக் லேலண்ட் நிறுவனம் சென்னை எண்ணூரில் இயங்கி வரும் ஆலையில் 16 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
அசோக் லேலண்ட்
அசோக் லேலண்ட்
Published on

ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் அசோக் லேலண்ட் நிறுவனம் சென்னை எண்ணூரில் இயங்கி வரும் ஆலையில் 16 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. 

இந்திய ஆட்டோமொபைல் துறையில் வாகன விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், பல்வேறு நிறுவனங்களும் வாகன உற்பத்தியை குறைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. சில நிறுவனங்கள் விற்பனையை அதிகப்படுத்த வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவற்றை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், கனரக வாகனங்களை உற்பத்தி செய்து வரும் அசோக் லேலண்ட் நிறுவனம் சென்னை ஆலையில் 16 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்தப்போவதாக அறிவித்திருக்கிறது.

பொருளாதார மந்தநிலை நீடிப்பதால் டொயோட்டோ, ஹூண்டாய் போன்ற கார் தயாரிப்பு நிறுவனங்கள் சில தொழிற்சாலைகளில் தங்களது உற்பத்தியை நிறுத்தின. அங்கு பணியாற்றுபவர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஆட்டோமொபைல் துறை சரிவை சந்தித்து வருகின்றது. ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் விற்பனைக்கு செல்லாமல் இருப்பதால், அவை தொழிற்சாலைகளில் தேங்கி நிற்கின்றன. இதனால் புதிய கார்கள் தயாரிப்பதை நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தத் தொடங்கியுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com