2023 ரீவைண்ட் - அதிகரித்த தொழில்நுட்ப நிறுவன பணிநீக்கங்கள்

பல "ஸ்டார்ட் அப்" நிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டனபணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2022-ஐ விட 2023ல் அதிகம்
2023 ரீவைண்ட் - அதிகரித்த தொழில்நுட்ப நிறுவன பணிநீக்கங்கள்
Published on

2022 வருட பிற்பகுதியில் அமெரிக்காவில் மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை பணியாளர்களை கூட்டம் கூட்டமாக பணிநீக்கம் செய்யும் "லே ஆஃப்" (layoff) நடைமுறை தொடங்கியது.

இவ்வருடமும் அந்த நடைமுறை தொடர்வதுடன் பணிநீக்கங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட், யாஹு, மெடா மற்றும் ஜூம் உள்ளிட்ட பல மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமின்றி "ஸ்டார்ட் அப்" நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன.

பல பணியாளர்களின் வேலையை செயற்கை நுண்ணறிவு மாற்றி வரும் சூழல், குறைந்து வரும் தொழில்நுட்ப சேவைகளுக்கான தேவை, பணியாளர்களின் திறன் வளர்த்தல் குறைபாடு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை, ஆண்டுதோறும் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு செலவினங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் லே ஆஃப் நடப்பதாக கூறப்பட்டு வருகிறது.

பணியை இழந்தவர்களுக்கு வேறு இடங்களில் வேலை கிடைப்பது குதிரை கொம்பாகி வருகிறது.

அமெரிக்காவில் ஹெச்1-பி விசா முறையில் பணிக்காக சென்றவர்கள் பணியில்லாமல் சில மாதங்களே வசிக்க முடியும். வேறு வேலை கிடைக்கவில்லை என்றால் அவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும். இச்சூழலில் வேலை இழந்தவர்கள் மாற்று வேலையை தேடி வருகிறார்கள்.

கடந்த டிசம்பர் 21 வரை 2,24,503 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த 2022 ஆண்டு எண்ணிக்கையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க பொருளாதார மந்த நிலை நீடித்தால் அடுத்த ஆண்டும் இது தொடரலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com