search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "foods to avoid"

    • கர்ப்பிணிகள் சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
    • மதுவை முற்றிலும் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.

    நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது நீங்கள் கற்றுக் கொள்ளும் முதல் விஷயங்களில் ஒன்று என்ன சாப்பிடக்கூடாது என்பதுதான். நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

    காபி

    மருத்துவர்களின் அறிவுரைப் படி, கர்ப்பிணிப் பெண்கள் பொதுவாக ஒரு நாளைக்கு 200 மில்லிகிராம் (மி.கி.) குறைவான காஃபின் மட்டும் எடுத்துகொள்ளுமாறு கூறுகின்றனர். அதற்கு மேல் எடுப்பதை கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறார்கள். காஃபின் மிக விரைவாக உறிஞ்சப்பட்டு நஞ்சுக்கொடியை எளிதில் கடக்கிறது. குழந்தைகள் மற்றும் அவர்களின் நஞ்சுக்கொடிகளில் காஃபின் வளர்சிதை ஏற்படுத்தும் என்பதால் இது அதிக அளவு ஆபத்திற்கு வழிவகுக்கும். பிரசவத்தின்போது குறைந்த எடையுடன் பிறக்கும் அபாயத்தை அதிகரிப்பதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    மெர்குரி மீன்

    பெரிய கடல் மீன்கள் அதிக அளவு பாதரசத்தை கொண்டது. அதனால் வாரத்திற்கு 180 கிராமிற்கு குறைவாக எடுத்து கொள்ளலாம். இல்லையென்றால் தவிர்த்துவிடலாம். சூரை மீன், சுறா மீன், புள்ளி களவா மீன், சங்கரா மீன்கர்ப்பம் போன்ற மீன்களை பாலூட்டும் போது இதுபோன்ற பாதரசம் நிறைந்த மீன்களைத் தவிர்ப்பது நல்லது.

    நன்கு சமைக்காத இறைச்சி

    பச்சை மீன், குறிப்பாக மட்டி, பல்வேறு நோய்த்தொற்றுகளை சுமந்து செல்லும். இதில் நோரோவைரஸ், விப்ரியோ, சால்மோனெல்லா மற்றும் லிஸ்டீரியா போன்ற வைரஸ், பாக்டீரியா அல்லது ஒட்டுண்ணி போன்ற நோய்த்தொற்றுகளை வர வைக்கலாம்.

    கர்ப்பிணிப் பெண்கள் குறிப்பாக பட்டியலிடப்பட்ட நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகிறார்கள். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) படி, பொது மக்களை விட கர்ப்பிணி பெண்கள் லிஸ்டீரியாவால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு 10 மடங்கு அதிகம்.

    அதிக கொழுப்பு உணவுகள்

    பன்றிக்கொழுப்பு, மாட்டிறைச்சி கொழுப்பு, கோழி கொழுப்பு, வெண்ணெய், கிரீம், சீஸ் இந்த கெட்ட கொழுப்புகள் சில பல இனிப்புகள் மற்றும் பிற பால் பொருட்களிலும் மறைந்துள்ளன. அதாவது பொரித்த கோழி, ஐஸ்கிரீம், பீட்ஸா, குக்கீகள், டோனட்ஸ், பேஸ்ட்ரிகள் ஆகியவை கர்ப்பம் தரிக்க தவிர்க்க வேண்டிய உணவுகள் ஆகும்.

    பதப்படுத்தப்படாத பால்

    கொழுப்பு நீக்கப்பட்ட பால், மொஸரெல்லா மற்றும் பாலாடைக்கட்டி போன்ற குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக இருக்கலாம். இருப்பினும், பேஸ்டுரைஸ் செய்யப்படாத பால் பொருட்களின் உணவு விஷத்தை ஏற்படுத்தும்.

    மது

    கர்ப்ப காலத்தில் மது அருந்துவதது கருச்சிதைவு மற்றும் பிரசவத்தின் அபாயத்தை அதிகரிக்கும் என்பதால் மது அருந்த கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. சிறிய அளவு கூட குழந்தையின் மூளை வளர்ச்சியை மோசமாக பாதிக்கும்.

    கர்ப்ப காலத்தில் மது அருந்துவது, முக குறைபாடுகள், இதய குறைபாடுகள் மற்றும் மனநல குறைபாடு உள்ளிட்ட கருவின் ஆல்கஹால் நோய்க்குறியையும் ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தில் மதுவை முற்றிலும் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.

    சோடா போன்ற குளிர் பானங்கள்

    சோடா போன்ற குளிர் பானங்களில் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் பல காஃபின் மற்றும் பிற பொருட்கள் உள்ளன. கர்ப்ப காலத்தில் இது அருந்த பரிந்துரைக்கப்படுவதில்லை.

    முட்டை

    பச்சை முட்டைகள் சால்மோனெல்லாவால் மாசுபட்டிருக்கலாம். சால்மோனெல்லா நோய்த்தொற்றின் அறிகுறிகளில் காய்ச்சல், குமட்டல், வாந்தி, வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை அடங்கும்.

    முளைகட்டிய பயிர்கள்

    முளை கட்டிய பயிரில் சால்மோனெல்லா என்ற நோய்கிருமி இருக்கும். விதை முளைப்பதற்குத் தேவையான ஈரப்பதமான சூழல் இந்த வகை பாக்டீரியாக்களுக்கு ஏற்றது மற்றும் முளை கட்டிய பயிரினை கழுவுவது கடினம். இந்த காரணத்திற்காக, முளை கட்டிய பயிர்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

    துரித உணவுகள்

    கர்ப்ப காலத்தில் ஹோட்டல்களில் விற்கப்படும் துரித உணவுகளை தவிர்த்து புரதம், காய்கறிகள் மற்றும் பழங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், முழு தானியங்கள், பீன்ஸ் மற்றும் மாவுச்சத்துள்ள காய்கறிகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட்டுகளை மையமாகக் கொண்ட உணவு மற்றும் சிற்றுண்டிகளை எடுத்துகொள்ளுங்கள். சுவையை இழக்காமல் உங்கள் உணவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

    • ஊட்டச்சத்துக்கள் கலந்த சமச்சீர் உணவை உண்ணலாம்.
    • போதிய ஊக்கம் அளித்து சோர்வில்லாமல் உடற்பயிற்சி செய்ய உதவும்.

    வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதைவிட, ஊட்டச்சத்துக்கள் கலந்த சமச்சீர் உணவை உட்கொண்டால் உடலின் செயல்திறன் மேம்படும். உடற்பயிற்சி செய்வதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பாக வாழைப்பழம் அல்லது ஆப்பிள் சாப்பிடலாம். இவை உடலுக்கு போதிய ஊக்கம் அளித்து சோர்வில்லாமல் உடற்பயிற்சி செய்வதற்கு உதவும். எளிதில் செரிமானமாகக்கூடிய சிற்றுண்டியையும் சிறிதளவு சாப்பிடலாம்.

    தவிர்க்க வேண்டிய உணவுகள்

    உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு சிட்ரஸ் பழங்கள், பால் பொருட்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அவை உடலுக்கு அசவுகரியத்தை உண்டாக்கக்கூடும். இதனால் உடற்பயிற்சியின் செயல்திறன் பாதிக்கப்படும். எண்ணெய் தன்மை கொண்ட உணவுகளை சாப்பிட்டாலும் இத்தகைய பிரச்சினையை உண்டாகும். உடலில் நீர்ச்சத்தை பேணுவதும் அவசியமானது. அதனால் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் பருகலாம். தாகமாக இருந்து, அதிக தண்ணீர் பருகினால் உடனே உடற்பயிற்சி செய்யக்கூடாது.

     உடற்பயிற்சிக்கு பிறகு சாப்பிட வேண்டியவை:

    உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு பழங்கள், நட்ஸ் வகைகள், முழு தானியங்கள், முட்டை, கோதுமை பிரெட், சாண்ட்விச், தயிர், பால் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாம். அப்படி உடற்பயிற்சி செய்யும்போது உணவுகளின் மூலம் ஆற்றலை பெறுவதற்கு பதிலாக உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உடல் பயன்படுத்திக்கொள்ளும்.

    அத்துடன் புரதங்களையும் பயன்படுத்திக்கொள்ளும். அதனை ஈடுசெய்வதற்கு ஊட்டச்சத்துமிக்க உணவை உட்கொள்வது அவசியமானது. கடினமான உடற்பயிற்சி செய்பவர்களை தவிர்த்து இலகுவான உடற்பயிற்சி செய்பவர்கள் சிறிதளவு சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு பயிற்சியை தொடங்குவது உடலுக்கு ஆரோக்கியமானது.

    • தாதுக்கள் அனைத்தும் சிறுநீரகத்தில் படிகிறது.
    • தாதுக்கள் அனைத்தும் சிறுநீரகத்தில் கற்களாக படிகிறது.

    உடலில் தாதுக்குகள் அதிகப்படியாக சேரும்போது அந்த தாதுக்கள் அனைத்தும் சிறுநீரகத்தில் படிகிறது. இவ்வாறு படியும் தாதுக்கள் அனைத்தும் சிறுநீரகத்தில் கற்களாக படிகிறது.

     சிறுநீரகத்தில் கல் பிரச்சினை இருந்தால் ஆக்சலேட் சார்ந்த உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது. அதாவது திராட்சை, பாதாம், முந்திரி, பிஸ்தா, வேர்க்கடலை, இனிப்பு பண்டங்கள், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, வால்நட் மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஆகிய உணவுகளில் அதிகளவு ஆக்சலேட் இருப்பதால் இந்த உணவுகளை சிறுநீரக கல் உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்வது நல்லது.

    மீன், ஆட்டு இறைச்சி, முட்டை, மாட்டு இறைச்சி ஆகியவற்றில் அதிகளவு புரதங்கள் இருப்பதால் சிறுநீரக கல் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிகளவு புரதம் உள்ள உணவுகளை சாப்பிடும்போது சிறுநீரகத்தில் புதிதாக கற்கள் வளர வாய்ப்பு உள்ளது.

    சிறுநீரகத்தில் இருப்பவர்கள் தக்காளி சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் தக்காளியில் வைட்டமின் சி இருப்பதால் இது உடலில் ஆக்சலேட் அளவை அதிகரிக்கச்செய்து சிறுநீரக கல் பிரச்சினையை அதிகரிக்கச்செய்யும். தக்காளி மட்டுமல்லாமல் வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளையும் அவர்கள் தவிர்க்க வேண்டும்.

    சாதாரணமாக இருக்கும் நபர்கள் உப்பு அதிகம் உள்ள உணவுப்பொருளையும் மற்றும் இனிப்பு அதிகம் உள்ள உணவுப்பொருட்களையும் சாப்பிடக் கூடாத நிலையில் இருக்கும்போது சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் இந்த மாதிரி உணவுகளை சுத்தமாக தவிர்த்துவிட வேண்டும்.

    ஒருவேளை இதுபோன்ற உணவுகளை எடுத்துக்கொண்டால் அது சிறுநீரக கற்கள் அதிகமாக உருவாவதற்கு தூண்டும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    சிறுநீரகத்தில் கற்கள் இருக்கும்போதுஅதிகம் தண்ணீர் உள்ள உணவுகளை மட்டும் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் நாம் சிறுநீர்கழிக்கும் போது கல் அதன் வழியாக வெளியேற உதவியாக இருக்கும்.

    அதனால் வறட்சியான மற்றும் கடைகளில் விற்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    • சாப்பிடும் உணவுகளில் இன்னும் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
    • கருவில் உள்ள குழந்தைக்கு உடல்நல பிரச்சினைகளை உண்டாக்கக் கூடும்.

    கர்ப்ப காலத்தின் போது நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இன்னும் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகப்படியான சர்க்கரை மற்றும் மதுபானம் போன்ற நச்சுப்பொருட்களை தவிர்ப்பது மட்டுமின்றி, சமைக்கப்படாத மீன், வறுத்த உணவுகள், அரைகுறையாக சமைக்கப்பட்ட மாமிசம், சரியாக கழுவப்படாத பழங்கள் மற்றும் குறிப்பிட்ட காய்கறிகளையும் உண்பதை தவிர்க்க வேண்டும். அவற்றில் தூய்மைக் கேடு ஏற்படும் வாய்ப்புள்ளதால் கருவில் உள்ள குழந்தைக்கு உடல்நல பிரச்சினைகளை உண்டாக்கக் கூடும்.

    நன்றாக சமைக்கப்பட்ட, ஊட்டச்சத்து மிகுந்த, ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற வைட்டமின்களும், மினரல்களும் நிறைந்த உணவினை தினமும் அதிகமாக எடுத்துக்கொள்வது நல்லது.

    தவிர்க்க வேண்டியவை:

    * மீன்களில் அதிக அளவில் மெர்க்குரி இருக்கும், இதனை அதிக அளவில் உட்கொள்ளும் பட்சத்தில், குழந்தைக்கு நரம்பு சம்பந்தமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். சுறா, மர்லின், ப்ளூஃபின் டியூனா, மற்றும் ஆரஞ்சு மற்றும் ஸ்வார்ட் மீன் போன்ற மீன்களை கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டும்.

    * பச்சை உணவுகளையும், மாமிசம் போன்ற அரைகுறையாக சமைக்கப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அவை லிஸ்டீரியா பாக்டீரியாவினால் மாசுபடுத்தப்பட்டிருக்கலாம், இதன்மூலம் கருக்கலைப்பு, குறைப்பிரசவம் போன்றவை ஏற்படலாம்.

    * பலருக்கு பச்சை முட்டை சாப்பிடுவது வழக்கமாக இல்லாமல் இருக்கலாம், ஆயினும் மயோனேஸ், சீஸர் சாலட் இந்த உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். மேலும் சமைத்த முட்டைகளையே உண்ண வேண்டும்.

    * பதப்படுத்தப்படாத பால் அல்லது பதப்படுத்தப்படாத பால் சார்ந்த பொருட்களைத் தவிர்க்க வேண்டும், ஏனென்றால் இவற்றில் லிஸ்டீரியா உள்ளது. இந்த பாக்டீரியாவால் கர்ப்பத்திலுள்ள சிசு அல்லது பிறந்த குழந்தைக்கு மோசமான தீங்குகள், குறைப்பிரசவம் கூட ஏற்படலாம்.

    * பச்சை நிற பப்பாளியில் கருச்சிதைவிற்கு இட்டுச் செல்கிற, கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நொதி உள்ளது. பழுக்காத பப்பாளியை உண்பது குறைப்பிரசவத்திற்கு இட்டுச் செல்லக் கூடிய வாய்ப்புள்ளது. எனவே, கர்ப்ப காலத்தின் போது இந்த உணவினை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    * நன்றாக சுத்தம் செய்யப்பட்ட பழங்களையும், காய்கறிகளையும் நீங்கள் உண்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். ஒரு வேளை அவை சரியாக கழுவப்படாவிட்டால், இவைகளின் மூலம் டாக்ஸோப்ளாஸ்மோசிஸ் என்னும் நோய் பரவும் வாய்ப்புள்ளது.

    * காரமான உணவுகள் என்பது சில சமயங்களில், கர்ப்பகாலத்தின் போது உண்பதற்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏனென்றால், அவற்றால் வயிற்று அமிலம் அல்லது பிற இரைப்பை சிக்கல்கள் போன்றவை உருவாக வாய்ப்பிருப்பதால் இவ்வாறு கருதப்படுகிறது.

    * துளசி, கற்பூரவள்ளி, பெருஞ்சீரகம், அல்லது கடுங்காரமுள்ள சிவப்பு மிளகு போன்றவை கருப்பை சுருக்கத்திற்கு உதவுவதாக நம்பப்படுகிறது. எனினும், ஒரு சில பொருட்களால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புள்ளதால், அவற்றை கர்ப்ப காலத்தின் போது சாப்பிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

    ×