என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து: ஓட்டல் அதிபர் உள்பட 2 பேர் பலி
Byமாலை மலர்21 Jan 2018 5:17 AM GMT (Updated: 21 Jan 2018 5:17 AM GMT)
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டல் அதிபர் உள்பட 2 பேர் பலியானார்கள். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணப்பாறை:
நெல்லை மாவட்டம் தென்காசி எஸ்.கே.டி. தெருவைச் சேர்ந்தவர் சாகுல் அமீது (வயது 36), ஓட்டல் உரிமையாளர். சென்னை சென்றிருந்த இவர் அங்கு வேலை முடிந்ததும் நேற்றிரவு தென்காசிக்கு காரில் புறப்பட்டார்.
காரில் அவருடன் தென்காசியை சேர்ந்த யாசீன் (34), அயூப் (35) ஆகியோரும் வந்தனர். காரை டிரைவர் பீர் முகமது (28) ஓட்டினார்.
இன்று அதிகாலை திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கல்லாமேடு நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. தொடர்ந்து சென்ற கார் நிலை தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 4 பேரும் காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி காயமடைந்தனர். பலத்த காயமடைந்த சாகுல் அமீது, யாசீன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்ற 2 பேரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பொது மக்கள் உதவியுடன் காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #TamilNews
நெல்லை மாவட்டம் தென்காசி எஸ்.கே.டி. தெருவைச் சேர்ந்தவர் சாகுல் அமீது (வயது 36), ஓட்டல் உரிமையாளர். சென்னை சென்றிருந்த இவர் அங்கு வேலை முடிந்ததும் நேற்றிரவு தென்காசிக்கு காரில் புறப்பட்டார்.
காரில் அவருடன் தென்காசியை சேர்ந்த யாசீன் (34), அயூப் (35) ஆகியோரும் வந்தனர். காரை டிரைவர் பீர் முகமது (28) ஓட்டினார்.
இன்று அதிகாலை திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கல்லாமேடு நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. தொடர்ந்து சென்ற கார் நிலை தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 4 பேரும் காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி காயமடைந்தனர். பலத்த காயமடைந்த சாகுல் அமீது, யாசீன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்ற 2 பேரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பொது மக்கள் உதவியுடன் காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #TamilNews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X