search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடையநல்லூரில் காதலியை கழுத்து அறுத்து கொல்ல முயன்ற வாலிபர்
    X

    கடையநல்லூரில் காதலியை கழுத்து அறுத்து கொல்ல முயன்ற வாலிபர்

    காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலியை கழுத்து அறுத்து கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் மலம்பேட்டைத் தெருவை சேர்ந்த நடராஜன் மகள் கோகிலா (வயது 19). இவரது வீட்டிற்கு அடுத்த தெருவில் வசிக்கும் அருணாசலம் மகன் ராமகிருஷ்ணன் (27). இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

    இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்துள்ளது. இதனால் இருவீட்டிலும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காதல் ஜோடி இருவரும் கடந்த சில நாட்களாக சந்தித்து பேச முடியாமல் தவித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில், ஊருக்கு வெளியே உள்ள குளத்தின் கரைப்பகுதியில் கழுத்து அறுபட்ட நிலையில் கோகிலா மயங்கி கிடந்தார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கோகிலாவை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கடைய நல்லூர் போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ராமகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் காதல் ஜோடி இருவரும் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் ராமகிருஷ்ணன் தனக்கு கிடைக்காத காதலி வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என முடிவு செய்து கோகிலாவை கொலை செய்யும் நோக்கில் கழுத்தை அறுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    தொடர்ந்து இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் ராமகிருஷ்ணனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடையநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×