என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி அருகே வேன் கவிழ்ந்து பள்ளி மாணவி பலி
Byமாலை மலர்16 Dec 2017 7:00 AM GMT (Updated: 16 Dec 2017 7:00 AM GMT)
திருச்சி அருகே இன்று வேன் கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 3 மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முசிறி:
திருச்சி மாவட்டம் முசிறியில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் முசிறியை சுற்றியுள்ள நெய்வேலி, புத்தூர், வேலாநத்தம் ஆகிய பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் படித்து வருகின்றனர். அவர்கள் தனியாருக்கு சொந்தமான ஆம்னி வேனில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.
இன்று காலை வழக்கம் போல் பள்ளி குழந்தைகள் வேனில் சென்றனர். வேனை நெய்வேலியை சேர்ந்த சிவக்குமார் (வயது 35) ஓட்டி சென்றார். வேனில் மாணவர்கள் 15 பேர் வரை இருந்தனர்.
நெய்வேலி- முசிறி சாலையில் வேலாநத்தம் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இது குறித்த தகவல் அறிந்ததும் முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த நெய்வேலியை சேர்ந்த மாணவர்கள் பிரதீபா, பூங்கவி,கோகுல தர்சினி,தேஜா, டிரைவர் சிவக்குமார் ஆகிய 5 பேரை மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் மேல் சிகிச்சைக்காக 1-ம் வகுப்பு மாணவி தேஜா திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தேஜா பரிதாபமாக இறந்தாள் .மற்ற மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் முசிறியில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் முசிறியை சுற்றியுள்ள நெய்வேலி, புத்தூர், வேலாநத்தம் ஆகிய பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் படித்து வருகின்றனர். அவர்கள் தனியாருக்கு சொந்தமான ஆம்னி வேனில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.
இன்று காலை வழக்கம் போல் பள்ளி குழந்தைகள் வேனில் சென்றனர். வேனை நெய்வேலியை சேர்ந்த சிவக்குமார் (வயது 35) ஓட்டி சென்றார். வேனில் மாணவர்கள் 15 பேர் வரை இருந்தனர்.
நெய்வேலி- முசிறி சாலையில் வேலாநத்தம் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இது குறித்த தகவல் அறிந்ததும் முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த நெய்வேலியை சேர்ந்த மாணவர்கள் பிரதீபா, பூங்கவி,கோகுல தர்சினி,தேஜா, டிரைவர் சிவக்குமார் ஆகிய 5 பேரை மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் மேல் சிகிச்சைக்காக 1-ம் வகுப்பு மாணவி தேஜா திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தேஜா பரிதாபமாக இறந்தாள் .மற்ற மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X