என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழனி அருகே வியாபாரியை கொன்று நகை-பணம் கொள்ளை
Byமாலை மலர்12 Aug 2017 4:02 AM GMT (Updated: 12 Aug 2017 4:02 AM GMT)
பழனி அருகே வியாபாரியை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பழனி:
பழனி அருகில் உள்ள மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது60). இவர் திண்டுக்கல் மெயின்ரோட்டில் இரும்பு கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி பூங்கொடி (45). இவர்களுக்கு ஸ்ரீராம், செண்பகராம் ஆகிய மகன்கள் உள்ளனர்.
ஸ்ரீராம் பொள்ளாச்சியில் என்ஜினீயரிங் கல்லூரியிலும், செண்பகராம் பிலிப்பைன்சில் எம்.பி.பி.எஸ். படித்து வருகின்றனர்.
கணவன்-மனைவி இருவரும் நேற்று கோவிலுக்கு சென்று விட்டு கடைக்கு வந்தனர். மனைவியை கடையில் விட்டு விட்டு முருகேசன் தான் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றார். அதன்பிறகு மாலை 7 மணி வரை கடைக்கு வரவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
சந்தேகம் அடைந்த அவரது மனைவி பூங்கொடி வீட்டிற்கு வந்து பார்த்தார். வீடு திறந்து இருந்தது. உள்ளே இருந்த அறையில் முருகேசன் சுயநினைவின்றி கிடந்தார். உடனே பதறிப்போய் அவரை பழனி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அப்போது முருகேசன் கழுத்திலும், உடம்பிலும் காயங்கள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்து பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் சோதனை செய்தபோது முருகேசன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும் வீட்டில் இருந்த நகை, பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளது. முருகேசன் வியாபாரத்திற்காக வீட்டில் பணம் அதிக அளவு வைத்திருந்தார்.
மேலும் தற்போதுதான் புதிய வீடு வாங்குவதற்காக விலை பேசி முன்பணமும் கொடுத்திருந்தார். மகன்கள் படிப்பு முடிந்து வரும்போது புதிய வீட்டில் குடியேறலாம் என நினைத்திருந்தார்.
இதனால் அவரிடம் பணம், நகை இருப்பதை கொலையாளிகள் முன்பே அறிந்துள்ளனர். அவரது வீட்டிற்கு வியாபாரம் தொடர்பாக பலர் வந்து செல்வதால் நேற்று அவரது வீட்டிற்கு வந்தவர்கள் குறித்தும் அக்கம் பக்கத்தினர் கண்டு கொள்ளவில்லை.
தனியாக முருகேசன் மட்டும் இருந்ததை உறுதி செய்து உள்ளே வந்த கொலையாளிகள் அவரது அறையில் இருந்த அயன்பாக்ஸ் வயரால் கழுத்தை இறுக்கினர்.
இதில் அவர் திமிறவே முகத்தை சுவற்றில் வைத்து அடித்துள்ளனர். இதனால் முருகேசன் இறந்தார். இதனையடுத்து உள்புறமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு இயற்கையாக அவரே இறந்ததுபோல் இருக்கட்டும் என்று நினைத்துள்ளனர்.
அதன்பிறகு பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் இருந்த தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.
மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பழனி அருகில் உள்ள மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது60). இவர் திண்டுக்கல் மெயின்ரோட்டில் இரும்பு கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி பூங்கொடி (45). இவர்களுக்கு ஸ்ரீராம், செண்பகராம் ஆகிய மகன்கள் உள்ளனர்.
ஸ்ரீராம் பொள்ளாச்சியில் என்ஜினீயரிங் கல்லூரியிலும், செண்பகராம் பிலிப்பைன்சில் எம்.பி.பி.எஸ். படித்து வருகின்றனர்.
கணவன்-மனைவி இருவரும் நேற்று கோவிலுக்கு சென்று விட்டு கடைக்கு வந்தனர். மனைவியை கடையில் விட்டு விட்டு முருகேசன் தான் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றார். அதன்பிறகு மாலை 7 மணி வரை கடைக்கு வரவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
சந்தேகம் அடைந்த அவரது மனைவி பூங்கொடி வீட்டிற்கு வந்து பார்த்தார். வீடு திறந்து இருந்தது. உள்ளே இருந்த அறையில் முருகேசன் சுயநினைவின்றி கிடந்தார். உடனே பதறிப்போய் அவரை பழனி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அப்போது முருகேசன் கழுத்திலும், உடம்பிலும் காயங்கள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்து பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் சோதனை செய்தபோது முருகேசன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும் வீட்டில் இருந்த நகை, பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளது. முருகேசன் வியாபாரத்திற்காக வீட்டில் பணம் அதிக அளவு வைத்திருந்தார்.
மேலும் தற்போதுதான் புதிய வீடு வாங்குவதற்காக விலை பேசி முன்பணமும் கொடுத்திருந்தார். மகன்கள் படிப்பு முடிந்து வரும்போது புதிய வீட்டில் குடியேறலாம் என நினைத்திருந்தார்.
இதனால் அவரிடம் பணம், நகை இருப்பதை கொலையாளிகள் முன்பே அறிந்துள்ளனர். அவரது வீட்டிற்கு வியாபாரம் தொடர்பாக பலர் வந்து செல்வதால் நேற்று அவரது வீட்டிற்கு வந்தவர்கள் குறித்தும் அக்கம் பக்கத்தினர் கண்டு கொள்ளவில்லை.
தனியாக முருகேசன் மட்டும் இருந்ததை உறுதி செய்து உள்ளே வந்த கொலையாளிகள் அவரது அறையில் இருந்த அயன்பாக்ஸ் வயரால் கழுத்தை இறுக்கினர்.
இதில் அவர் திமிறவே முகத்தை சுவற்றில் வைத்து அடித்துள்ளனர். இதனால் முருகேசன் இறந்தார். இதனையடுத்து உள்புறமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு இயற்கையாக அவரே இறந்ததுபோல் இருக்கட்டும் என்று நினைத்துள்ளனர்.
அதன்பிறகு பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் இருந்த தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.
மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X