என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமேதியில் ராகுல் வருகைக்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் - வேறு பாதையில் சென்றார்
Byமாலை மலர்16 Jan 2018 2:26 PM GMT (Updated: 16 Jan 2018 2:26 PM GMT)
அமேதி பாராளுமன்ற தொகுதியில் ராகுல் காந்தியின் பேரணிக்கு எதிராக பா.ஜ.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பாதுகாப்பு கருதி அவரை போலீசார் வேறு பாதையில் அனுப்பி வைத்தனர்.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக பதவி வகிக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தொகுதியில் சுற்றுப்பயணம் செய்வதற்காக நேற்று லக்னோ நகரை வந்தடைந்தார். முன்சிகஞ்ச் பகுதியில் இன்று பொதுமக்களின் குறைகளை ‘ஜனதா தர்பார்’ நிகழ்ச்சியின் மூலம் கேட்டறிந்தார்.
நூற்றுக்கும் அதிகமானவர்களின் குறைகளையும், குமுறல்களையும் பொறுமையாக கேட்டறிந்த அவர், அங்கிருந்து முசாபிர்கானா பகுதிக்கு புறப்பட்டு சென்றார். ஆனால், கவுரிகஞ்ச் பகுதி வழியாக முசாபிர்கானா நோக்கி செல்லும் பாதையில் ராகுல் காந்தியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வினர் இடையே வாக்குவாதமும் லேசான தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு இருதரப்பினரையும் சமாதனப்படுத்தினர். இதனால், பாதுகாப்பு கருதி ஜமோ சாலை வழியாக ராகுல் காந்தியை போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதேபோல், ரேபரேலி மாவட்டத்தில் உள்ள பர்ஷ்தேர்பூர் பகுதியிலும் ராகுலுக்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அமேதி ராஜீவ் காந்தி சதுக்கத்தில் உள்ள தனது தந்தை ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க முடியாமல் ராகுல் காந்தி ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல நேரிட்டது. #tamilnews
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக பதவி வகிக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தொகுதியில் சுற்றுப்பயணம் செய்வதற்காக நேற்று லக்னோ நகரை வந்தடைந்தார். முன்சிகஞ்ச் பகுதியில் இன்று பொதுமக்களின் குறைகளை ‘ஜனதா தர்பார்’ நிகழ்ச்சியின் மூலம் கேட்டறிந்தார்.
நூற்றுக்கும் அதிகமானவர்களின் குறைகளையும், குமுறல்களையும் பொறுமையாக கேட்டறிந்த அவர், அங்கிருந்து முசாபிர்கானா பகுதிக்கு புறப்பட்டு சென்றார். ஆனால், கவுரிகஞ்ச் பகுதி வழியாக முசாபிர்கானா நோக்கி செல்லும் பாதையில் ராகுல் காந்தியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வினர் இடையே வாக்குவாதமும் லேசான தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு இருதரப்பினரையும் சமாதனப்படுத்தினர். இதனால், பாதுகாப்பு கருதி ஜமோ சாலை வழியாக ராகுல் காந்தியை போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதேபோல், ரேபரேலி மாவட்டத்தில் உள்ள பர்ஷ்தேர்பூர் பகுதியிலும் ராகுலுக்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அமேதி ராஜீவ் காந்தி சதுக்கத்தில் உள்ள தனது தந்தை ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க முடியாமல் ராகுல் காந்தி ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல நேரிட்டது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X