search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிகாரத்தில் இருந்து பா.ஜ.க.வை தூக்கி எறிய இறுதி மூச்சு உள்ளவரை போராடுவேன்: லாலு சபதம்
    X

    அதிகாரத்தில் இருந்து பா.ஜ.க.வை தூக்கி எறிய இறுதி மூச்சு உள்ளவரை போராடுவேன்: லாலு சபதம்

    ஆட்சி அதிகாரத்தில் இருந்து ஆளும் பா.ஜ.க.வை தூக்கி எறிவதற்கு எனது இறுதி மூச்சு உள்ளவரை போராடுவேன் என பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
    பாட்னா:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பற்றிய நூல் வெளியீட்டு விழா பீகார் தலைநகரான பாட்னாவில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற பீகார் முன்னாள் முதல் மந்திரியும் ராஷ்டரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து ஆளும் பா.ஜ.க.வை தூக்கி எறிவதற்கு எனது இறுதி மூச்சு உள்ளவரை போராடுவேன் என தெரிவித்துள்ளார்.

    போலி வாக்குறுதிகளை அள்ளித்தருவதை தவிர நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேறு எதையுமே செய்யவில்லை. இவரது ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது என தனது பேச்சில் குறிப்பிட்ட லாலு, மோடியைப்போன்ற ஒரு பிரதமரை இந்த நாடு சந்தித்ததே இல்லை என்று கூறினார்.

    தன்னையும் உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி மாயாவதி, மேற்கு வங்காளம் மாநில மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோரையும் பழி வாங்குவதற்கு சி.பி.ஐ. வருமான வரித்துறை ஆகியவற்றை தவறாக பயன்படுத்திவரும் மோடி தலைமையிலான மத்திய அரசை ஆட்சி அதிகாரத்தில் இருந்து ஆளும் பா.ஜ.க.வை தூக்கி எறிவதற்கு எனது இறுதி மூச்சு உள்ளவரை போராடுவேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
    Next Story
    ×