search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி: கார், மோட்டர் பைக் மீது பேருந்து மோதி விபத்து - 5 பேர் பலி
    X

    உ.பி: கார், மோட்டர் பைக் மீது பேருந்து மோதி விபத்து - 5 பேர் பலி

    உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா மாவட்டம் சுரிர் என்ற இடத்தில் நேற்று இரவு, திருமண வீட்டைச் சேர்ந்தவர்களை ஏற்றிகொண்டு வந்த பேருந்தானது எதிரே வந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில், காரில் வந்த 4 பேர் மற்றும் பைக்கில் வந்த ஒருவர் பரிதாபமாக பலியாகினர்.

    மேலும், இருவர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்தில் இருந்த ஓட்டுநர் மற்றும் பயணிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×