என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காந்தி மற்றும் நேருவை குப்பைகளுடன் ஒப்பிட்டு பேசிய அசாம் பா.ஜ.க எம்.பி
Byமாலை மலர்23 Oct 2017 3:19 AM GMT (Updated: 23 Oct 2017 3:19 AM GMT)
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி கமாஹ்யா பிரசாத் டாஸ்சா, காந்தி மற்றும் நேருவை குப்பைகளுடன் ஒப்பிட்டு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கவுகாத்தி:
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி கமாஹ்யா பிரசாத் டாஸ்சா கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது, “தீன்தள் உபாத்யாவின் சிந்தாந்தங்கள் பற்றி தெரியாமல் காங்கிரஸ் கட்சியானது மக்களின் மூளையை காந்தி மற்றும் நேரு போன்ற குப்பைகளை கொண்டு சலவை செய்கிறது” என கூறினார். இந்த கூட்டத்தில் அம்மாநில முதல்வர் சர்பானந்த சோனாவாலும் பங்கேற்றிருந்தார்.
டாஸ்சாவின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியதோடு, டெஸ்சாவின் உருவ பொம்மைகளை எரித்தனர். மேலும், இது தொடர்பாக அம்மாநில காங்கிரஸ் கமிட்டியினர் போலீசில் புகாரளித்துள்ளனர்.
டெஸ்சாவை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என காங்கிரஸ் எம்.பி.க்கள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி கமாஹ்யா பிரசாத் டாஸ்சா கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது, “தீன்தள் உபாத்யாவின் சிந்தாந்தங்கள் பற்றி தெரியாமல் காங்கிரஸ் கட்சியானது மக்களின் மூளையை காந்தி மற்றும் நேரு போன்ற குப்பைகளை கொண்டு சலவை செய்கிறது” என கூறினார். இந்த கூட்டத்தில் அம்மாநில முதல்வர் சர்பானந்த சோனாவாலும் பங்கேற்றிருந்தார்.
டாஸ்சாவின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியதோடு, டெஸ்சாவின் உருவ பொம்மைகளை எரித்தனர். மேலும், இது தொடர்பாக அம்மாநில காங்கிரஸ் கமிட்டியினர் போலீசில் புகாரளித்துள்ளனர்.
டெஸ்சாவை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என காங்கிரஸ் எம்.பி.க்கள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X