என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்க பாதுகாப்பு செயலர் இந்தியா வருகை: பிரதமருடன் இன்று சந்திப்பு
Byமாலை மலர்26 Sep 2017 2:20 AM GMT (Updated: 26 Sep 2017 2:20 AM GMT)
அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வரும் அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜிம் மேட்டீஸ் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்திக்க உள்ளார்.
புதுடெல்லி:
அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜிம் மேட்டீஸ் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். தலைநகர் டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கும் அவரை இந்திய உயரதிகாரிகள் வரவேற்கின்றனர். பின்னர், பிரதமர் மோடி மற்றும் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
தெற்காசியாவில் அமெரிக்காவின் உற்ற நட்பு நாடாக இந்தியா உள்ளதாகவும், தீவிரவாதம் தொடர்பாக அமெரிக்கா எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் இந்தியா ஆதரவு அளித்து வருவதாகவும் அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாதத்தை வேரோடு ஒழிப்பதற்காக இந்தியா சிறந்த பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த ஆப்கானிஸ்தான் கொள்கையை இந்தியா கருத்து வேறுபாடின்றி ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜிம் மேட்டீஸ் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். தலைநகர் டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கும் அவரை இந்திய உயரதிகாரிகள் வரவேற்கின்றனர். பின்னர், பிரதமர் மோடி மற்றும் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
தெற்காசியாவில் அமெரிக்காவின் உற்ற நட்பு நாடாக இந்தியா உள்ளதாகவும், தீவிரவாதம் தொடர்பாக அமெரிக்கா எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் இந்தியா ஆதரவு அளித்து வருவதாகவும் அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாதத்தை வேரோடு ஒழிப்பதற்காக இந்தியா சிறந்த பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த ஆப்கானிஸ்தான் கொள்கையை இந்தியா கருத்து வேறுபாடின்றி ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X