என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மராட்டியம்: மந்திர சக்தி பெறுவதற்காக சிறுமியை நரபலி கொடுத்த 7 பேருக்கு மரண தண்டனை
Byமாலை மலர்14 Aug 2017 7:10 PM GMT (Updated: 14 Aug 2017 7:10 PM GMT)
மராட்டிய மாநிலத்தில் மந்திர சக்தி பெறுவதற்காக 7 வயது சிறுமியை கடத்தி நரபலி கொடுத்து கொன்ற வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை விதித்து யவாட்மால் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பை:
மராட்டிய மாநிலத்தில் மந்திர சக்தி பெறுவதற்காக 7 வயது சிறுமியை கடத்தி நரபலி கொடுத்து கொன்ற வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை விதித்து யவாட்மால் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மராட்டிய மாநிலம் யவாட்மால் மாவட்டத்தில் உள்ள சோராம்பா கிராமத்தைச் சேர்ந்த சிலர் கடந்த 2012-ம் ஆண்டில் மந்திர சக்திகளை பெறுவதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமியை கடத்தி தலையை துண்டித்து கொடூரமாக நரபலி கொடுத்துள்ளனர். பின்னர், சிறுமியின் சடலத்தை யாருக்கும் தெரியாமல் புதைத்துள்ளனர்.
இந்த விவகாரம் வெளியான பின்னர், சிறுமி நரபலி கொடுக்கப்பட்டது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு அம்மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று இதற்கான தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில், சிறுமியை சிறிதும் ஈவிரக்கமின்றி கொன்ற 7 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், இந்த குற்றத்தில் தொடர்புடைய மற்றொரு நபருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்தும் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
மராட்டிய மாநிலத்தில் மந்திர சக்தி பெறுவதற்காக 7 வயது சிறுமியை கடத்தி நரபலி கொடுத்து கொன்ற வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை விதித்து யவாட்மால் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மராட்டிய மாநிலம் யவாட்மால் மாவட்டத்தில் உள்ள சோராம்பா கிராமத்தைச் சேர்ந்த சிலர் கடந்த 2012-ம் ஆண்டில் மந்திர சக்திகளை பெறுவதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமியை கடத்தி தலையை துண்டித்து கொடூரமாக நரபலி கொடுத்துள்ளனர். பின்னர், சிறுமியின் சடலத்தை யாருக்கும் தெரியாமல் புதைத்துள்ளனர்.
இந்த விவகாரம் வெளியான பின்னர், சிறுமி நரபலி கொடுக்கப்பட்டது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு அம்மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று இதற்கான தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில், சிறுமியை சிறிதும் ஈவிரக்கமின்றி கொன்ற 7 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், இந்த குற்றத்தில் தொடர்புடைய மற்றொரு நபருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்தும் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X