search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மராட்டியம்: மந்திர சக்தி பெறுவதற்காக சிறுமியை நரபலி கொடுத்த 7 பேருக்கு மரண தண்டனை
    X

    மராட்டியம்: மந்திர சக்தி பெறுவதற்காக சிறுமியை நரபலி கொடுத்த 7 பேருக்கு மரண தண்டனை

    மராட்டிய மாநிலத்தில் மந்திர சக்தி பெறுவதற்காக 7 வயது சிறுமியை கடத்தி நரபலி கொடுத்து கொன்ற வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை விதித்து யவாட்மால் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    மும்பை:

    மராட்டிய மாநிலத்தில் மந்திர சக்தி பெறுவதற்காக 7 வயது சிறுமியை கடத்தி நரபலி கொடுத்து கொன்ற வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை விதித்து யவாட்மால் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மராட்டிய மாநிலம் யவாட்மால் மாவட்டத்தில் உள்ள சோராம்பா கிராமத்தைச் சேர்ந்த சிலர் கடந்த 2012-ம் ஆண்டில் மந்திர சக்திகளை பெறுவதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமியை கடத்தி தலையை துண்டித்து கொடூரமாக நரபலி கொடுத்துள்ளனர். பின்னர், சிறுமியின் சடலத்தை யாருக்கும் தெரியாமல் புதைத்துள்ளனர்.

    இந்த விவகாரம் வெளியான பின்னர், சிறுமி நரபலி கொடுக்கப்பட்டது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு அம்மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று இதற்கான தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில், சிறுமியை சிறிதும் ஈவிரக்கமின்றி கொன்ற 7 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    மேலும், இந்த குற்றத்தில் தொடர்புடைய மற்றொரு நபருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்தும் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×