என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் மக்கள் என் பக்கம்: மோடி பெருமிதம்
Byமாலை மலர்26 May 2017 4:13 PM GMT (Updated: 26 May 2017 4:13 PM GMT)
கடுமையான பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு மக்கள் முழு ஆதரவு அளித்ததாக பிரமர் மோடி கூறியதுடன், மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
கவுகாத்தி:
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் அசாம் மாநிலம் கவுகாத்தியி்ல் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
நாட்டு மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பலத்தை தருகிறது. பண மதிப்பிழப்பு நடிவடிக்கையானது மிகவும் கடுமையான நடவடிக்கை. இதனால், பல தலைவர்கள் மக்களிடையே கோபத்தையும் ஆத்திரத்தையும் தூண்ட முயற்சித்தனர். ஆனால், மக்களின் ஆசியுடன் இந்த அரசு அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்தது. கடுமையான முடிவுகளையும் கடந்து எங்களுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்தது. இப்போது மக்கள் மாற்றத்தை பார்க்க முடிகிறது. அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் ஆதரவு அளிக்கும் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
2022-ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதர பிற்படுத்தப்பட்ட இனத்தவர்களை உயர்த்துவதற்கான நடவடிக்கைக்கு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக ஓ.பி.சி. கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
கருப்புப் பண விவகாரத்தைப் பொருத்தவரை, முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்தோம். ஊழல்வாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் கருப்புப் பணமானது, ஏழைகளுக்கு சென்று சேரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் அசாம் மாநிலம் கவுகாத்தியி்ல் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
நாட்டு மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பலத்தை தருகிறது. பண மதிப்பிழப்பு நடிவடிக்கையானது மிகவும் கடுமையான நடவடிக்கை. இதனால், பல தலைவர்கள் மக்களிடையே கோபத்தையும் ஆத்திரத்தையும் தூண்ட முயற்சித்தனர். ஆனால், மக்களின் ஆசியுடன் இந்த அரசு அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்தது. கடுமையான முடிவுகளையும் கடந்து எங்களுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்தது. இப்போது மக்கள் மாற்றத்தை பார்க்க முடிகிறது. அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் ஆதரவு அளிக்கும் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
2022-ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதர பிற்படுத்தப்பட்ட இனத்தவர்களை உயர்த்துவதற்கான நடவடிக்கைக்கு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக ஓ.பி.சி. கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
கருப்புப் பண விவகாரத்தைப் பொருத்தவரை, முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்தோம். ஊழல்வாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் கருப்புப் பணமானது, ஏழைகளுக்கு சென்று சேரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X