என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேறு ஒரு பெண்ணுடன் திருமணம்: திராவகம் வீசி மணமகனை கொலை செய்த காதலி
Byமாலை மலர்25 May 2017 5:13 AM GMT (Updated: 25 May 2017 5:13 AM GMT)
ஆந்திர மாநிலம் குண்டூரில் வேறு பெண்ணை திருமணம் செய்ததால் மணமகனை முன்னாள் காதலி திராவகம் வீசி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குண்டூர்:
ஆந்திர மாநிலம் குண்டூர் பெத்த ககானி மண்டலம் வேணி கண்ட்லா கிராமத்தை சேர்ந்தவர் இலியாஸ். இவர் அருகில் உள்ள பமுலபாடு கிராமத்தைச்சேர்ந்த ஹிமா பிந்து என்ற பெண்ணை 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
ஹிமா பிந்து கடந்த ஒரு ஆண்டாக குண்டூரில் மருந்து கடையில் வேலை பார்த்தார். அங்கேயே ஆஸ்டலில் தங்கி இருந்தார். இதனால் காதலர்களுக்கு இடையே பிரிவு ஏற்பட்டது.
இந்த நிலையில் இலியாஸ் வேறு பெண்ணை திருமணம் செய்தார் 2 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. இதைக் கேள்விப்பட்டு பிந்து ஆவேசம் அடைந்தார். என்னை ஏமாற்றி வேறு பெண்ணை திருமணம் செய்கிறாயா, என நினைத்து காதலனை பழிவாங்க துடித்தார்.
முன்னாள் காதலன் இலியாசுடன் பேசி, உனக்கு வேறு பெண்ணுடன் திருமணம் ஆகிவிட்டதே உன்னிடம் உள்ள எனது போட்டோக்களை கொடுத்து விடு என்று கூறி தனது இருப்பிடத்துக்கு பிந்து வரவழைத்தார்.
இதை நம்பிய இலியாஸ் முன்னாள் காதலியை சந்திக்க வந்தார். அப்போது இருவருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசம் அடைந்த பிந்து தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து இலியாஸ் முகத்தில் வீசினார்.
இதில் முகம் முழுவதும் வெந்து வேதனையால் துடித்தார். உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இலியாஸ் இறந்தார்.
இது பற்றி குண்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆந்திர மாநிலம் குண்டூர் பெத்த ககானி மண்டலம் வேணி கண்ட்லா கிராமத்தை சேர்ந்தவர் இலியாஸ். இவர் அருகில் உள்ள பமுலபாடு கிராமத்தைச்சேர்ந்த ஹிமா பிந்து என்ற பெண்ணை 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
ஹிமா பிந்து கடந்த ஒரு ஆண்டாக குண்டூரில் மருந்து கடையில் வேலை பார்த்தார். அங்கேயே ஆஸ்டலில் தங்கி இருந்தார். இதனால் காதலர்களுக்கு இடையே பிரிவு ஏற்பட்டது.
இந்த நிலையில் இலியாஸ் வேறு பெண்ணை திருமணம் செய்தார் 2 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. இதைக் கேள்விப்பட்டு பிந்து ஆவேசம் அடைந்தார். என்னை ஏமாற்றி வேறு பெண்ணை திருமணம் செய்கிறாயா, என நினைத்து காதலனை பழிவாங்க துடித்தார்.
முன்னாள் காதலன் இலியாசுடன் பேசி, உனக்கு வேறு பெண்ணுடன் திருமணம் ஆகிவிட்டதே உன்னிடம் உள்ள எனது போட்டோக்களை கொடுத்து விடு என்று கூறி தனது இருப்பிடத்துக்கு பிந்து வரவழைத்தார்.
இதை நம்பிய இலியாஸ் முன்னாள் காதலியை சந்திக்க வந்தார். அப்போது இருவருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசம் அடைந்த பிந்து தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து இலியாஸ் முகத்தில் வீசினார்.
இதில் முகம் முழுவதும் வெந்து வேதனையால் துடித்தார். உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இலியாஸ் இறந்தார்.
இது பற்றி குண்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X