என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வள்ளியூர் அருகே கந்துவட்டி கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல்
Byமாலை மலர்12 Dec 2017 7:05 AM GMT (Updated: 12 Dec 2017 7:05 AM GMT)
வள்ளியூர் அருகே கந்துவட்டி கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை மற்றும் மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள வடக்கன்குளத்தை சேர்ந்தவர் குணசீலன். இவரது மனைவி அன்னஜோதி. இவர்கள் அந்த பகுதியை சேர்ந்த துரை ராஜ் என்பவருடன் சேர்ந்து வெளிநாட்டுக்கு ‘டைல்ஸ்’ ஏற்றுமதி செய்து வந்தனர்.
இதற்காக அன்னஜோதி, துரைராஜ் பெயரில் வள்ளியூரை சேர்ந்த தங்கப்பன் என்ற சுப்பிரமணியன் என்பவரிடம் 518 கிராம் தங்க நகைகளை கொடுத்து ரூ.5 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி உள்ளார்.
இதற்கு அசல் மற்றும் வட்டியாக மாதம் தோறும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கட்டினார். இப்படி 7 மாதம் கட்டிய பிறகும் அன்னஜோதியிடம் அசல் ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று தங்கப்பன் கேட்டு வந்தார்.
இதற்காக அன்னஜோதி கொடுத்த 6 ஏக்கர் 25 சென்டு இடத்துக்கு உள்ள பத்திரத்தையும் தங்கப்பன் கொடுக்க மறுத்து விட்டாராம். இதை அன்னஜோதி கேட்ட போது தங்கப்பனும், அவரது மகன் சுடலை கண்ணுவும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து அன்னஜோதி வள்ளியூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கந்து வட்டி வழக்குப்பதிவு செய்து தங்கப்பன், சுடலைகண்ணு ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள வடக்கன்குளத்தை சேர்ந்தவர் குணசீலன். இவரது மனைவி அன்னஜோதி. இவர்கள் அந்த பகுதியை சேர்ந்த துரை ராஜ் என்பவருடன் சேர்ந்து வெளிநாட்டுக்கு ‘டைல்ஸ்’ ஏற்றுமதி செய்து வந்தனர்.
இதற்காக அன்னஜோதி, துரைராஜ் பெயரில் வள்ளியூரை சேர்ந்த தங்கப்பன் என்ற சுப்பிரமணியன் என்பவரிடம் 518 கிராம் தங்க நகைகளை கொடுத்து ரூ.5 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி உள்ளார்.
இதற்கு அசல் மற்றும் வட்டியாக மாதம் தோறும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கட்டினார். இப்படி 7 மாதம் கட்டிய பிறகும் அன்னஜோதியிடம் அசல் ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று தங்கப்பன் கேட்டு வந்தார்.
இதற்காக அன்னஜோதி கொடுத்த 6 ஏக்கர் 25 சென்டு இடத்துக்கு உள்ள பத்திரத்தையும் தங்கப்பன் கொடுக்க மறுத்து விட்டாராம். இதை அன்னஜோதி கேட்ட போது தங்கப்பனும், அவரது மகன் சுடலை கண்ணுவும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து அன்னஜோதி வள்ளியூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கந்து வட்டி வழக்குப்பதிவு செய்து தங்கப்பன், சுடலைகண்ணு ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X