search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வள்ளியூர் அருகே கந்துவட்டி கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல்
    X

    வள்ளியூர் அருகே கந்துவட்டி கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல்

    வள்ளியூர் அருகே கந்துவட்டி கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை மற்றும் மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள வடக்கன்குளத்தை சேர்ந்தவர் குணசீலன். இவரது மனைவி அன்னஜோதி. இவர்கள் அந்த பகுதியை சேர்ந்த துரை ராஜ் என்பவருடன் சேர்ந்து வெளிநாட்டுக்கு ‘டைல்ஸ்’ ஏற்றுமதி செய்து வந்தனர்.

    இதற்காக அன்னஜோதி, துரைராஜ் பெயரில் வள்ளியூரை சேர்ந்த தங்கப்பன் என்ற சுப்பிரமணியன் என்பவரிடம் 518 கிராம் தங்க நகைகளை கொடுத்து ரூ.5 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி உள்ளார்.

    இதற்கு அசல் மற்றும் வட்டியாக மாதம் தோறும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கட்டினார். இப்படி 7 மாதம் கட்டிய பிறகும் அன்னஜோதியிடம் அசல் ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று தங்கப்பன் கேட்டு வந்தார்.

    இதற்காக அன்னஜோதி கொடுத்த 6 ஏக்கர் 25 சென்டு இடத்துக்கு உள்ள பத்திரத்தையும் தங்கப்பன் கொடுக்க மறுத்து விட்டாராம். இதை அன்னஜோதி கேட்ட போது தங்கப்பனும், அவரது மகன் சுடலை கண்ணுவும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து அன்னஜோதி வள்ளியூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கந்து வட்டி வழக்குப்பதிவு செய்து தங்கப்பன், சுடலைகண்ணு ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×