என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல்லில் திருட்டு காரை விற்ற கணவன்-மனைவிக்கு சிறை
Byமாலை மலர்6 Dec 2017 10:48 AM GMT (Updated: 6 Dec 2017 10:48 AM GMT)
திண்டுக்கல்லில் திருட்டு காரை விற்ற தம்பதிக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து திண்டுக்கல் ஜே.எம்.3 கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பூச்சிநாயக்கன் பட்டியைச் சேர்ந்த சண்முகம் மனைவி குமுதவள்ளி. இவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரிடம் திண்டுக்கல் மின் வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக வேலை பார்த்த ரமேஷ் (வயது 50), அவரது மனைவி சாந்தா ஆகியோர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த மதுசூதனன் என்பவரை அறிமுகம் செய்து வைத்தனர்.
அவர் கார் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். மேலும் கேரளாவில் இருந்து கொண்டு வந்த காரை குமுதவள்ளிக்கு ரூ.1.45 லட்சத்துக்கு விற்பனை செய்தார். இது கேரளாவில் திருடப்பட்ட கார் என்று புகார் வரவே அதனை கேரள போலீசார் எடுத்துச் சென்றனர்.
இது குறித்து குமுதவள்ளி நகர் தெற்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் மின் வாரிய பொறியாளர் ரமேஷ், சாந்தா, மதுசூதனன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். திண்டுக்கல் ஜே.எம்.3 கோர்ட்டில் இந்த விசாரணை நடந்து வந்தது. விசாரணையின் போதே மதுசூதனன் தலைமறைவானார். இந்த வழக்கில் ரமேஷ் மற்றும் சாந்தாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு தீபா தீர்ப்பளித்தார்.
திண்டுக்கல் பூச்சிநாயக்கன் பட்டியைச் சேர்ந்த சண்முகம் மனைவி குமுதவள்ளி. இவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரிடம் திண்டுக்கல் மின் வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக வேலை பார்த்த ரமேஷ் (வயது 50), அவரது மனைவி சாந்தா ஆகியோர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த மதுசூதனன் என்பவரை அறிமுகம் செய்து வைத்தனர்.
அவர் கார் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். மேலும் கேரளாவில் இருந்து கொண்டு வந்த காரை குமுதவள்ளிக்கு ரூ.1.45 லட்சத்துக்கு விற்பனை செய்தார். இது கேரளாவில் திருடப்பட்ட கார் என்று புகார் வரவே அதனை கேரள போலீசார் எடுத்துச் சென்றனர்.
இது குறித்து குமுதவள்ளி நகர் தெற்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் மின் வாரிய பொறியாளர் ரமேஷ், சாந்தா, மதுசூதனன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். திண்டுக்கல் ஜே.எம்.3 கோர்ட்டில் இந்த விசாரணை நடந்து வந்தது. விசாரணையின் போதே மதுசூதனன் தலைமறைவானார். இந்த வழக்கில் ரமேஷ் மற்றும் சாந்தாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு தீபா தீர்ப்பளித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X