என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுப்பெண் திடீர் மாயம்
Byமாலை மலர்23 Nov 2017 11:08 AM GMT (Updated: 23 Nov 2017 11:08 AM GMT)
கோவை துடியலூரில் இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுப்பெண் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுண்டம்பாளையம்:
கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை சஞ்சீவி நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகள் சங்கீதா (வயது 22). இவருக்கும் மதுக்கரையை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அதன்படி இன்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில் சங்கீதா கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கம் மற்றும் தோழிகள் வீட்டில் தேடிப்பார்த்தனர். ஆனால் சங்கீதாவை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து பெற்றோர் துடியலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சங்கீதாவை தேடி வருகிறார்கள்.
இன்று காலை நடக்க இருந்த திருமணம் நின்றுபோனதால் உறவினர்கள், நண்பர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை சஞ்சீவி நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகள் சங்கீதா (வயது 22). இவருக்கும் மதுக்கரையை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அதன்படி இன்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில் சங்கீதா கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கம் மற்றும் தோழிகள் வீட்டில் தேடிப்பார்த்தனர். ஆனால் சங்கீதாவை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து பெற்றோர் துடியலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சங்கீதாவை தேடி வருகிறார்கள்.
இன்று காலை நடக்க இருந்த திருமணம் நின்றுபோனதால் உறவினர்கள், நண்பர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X