search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜபாளையம் அருகே சொத்து தகராறில் தந்தையை தாக்கிய மகன் கைது
    X

    ராஜபாளையம் அருகே சொத்து தகராறில் தந்தையை தாக்கிய மகன் கைது

    சொத்து தகராறில் தந்தையை உருட்டுக் கட்டையால் தாக்கியதாக மகனை போலீசார் கைது செய்தனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள செல்லம்பட்டி இந்திரா காலனியைச் சேர்ந்தவர் பெரியமாரியப்பன் (வயது 85) விவசாயி. இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர்.

    பெரியமாரியப்பன் பெயரில் 10 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை அவரே பயிர் செய்து வருகிறார். அவரது மூத்த மகன் தங்க மாரியப்பன் (40) அடிக்கடி சொத்தை பிரித்து தருமாறு கேட்டு தந்தையிடம் தகராறு செய்து வந்தார்.

    நேற்று பெரிய மாரியப்பன் மாட்டுத் தொழுவத்தில் இருந்தபோது, தங்க மாரியப்பன் அங்கு வந்து மீண்டும் சொத்து குறித்து வாக்குவாதம் செய்தார்.

    அப்போது ஆத்திரம் அடைந்த அவர், உருட்டுக்கட்டையால் தந்தையை தாக்கிவிட்டு தப்பி ஓடினார்.

    பலத்த காயம் அடைந்த பெரிய மாரியப்பன் சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.

    தாக்குதல் சம்பவம் குறித்து பெரிய மாரியப்பனின் மனைவி பஞ்சவர்ணம், கீழராஜகுலராமன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சேசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து தங்க மாரியப்பன் கைது செய்யப்பட்டார்.

    Next Story
    ×