search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ்சை படத்தில் காணலாம்
    X
    ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ்சை படத்தில் காணலாம்

    வாலிபரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

    வேலூரில் அரசு பஸ் மோதி வாலிபர் ஒருவர் பலியானார். இது குறித்து அந்த வாலிபரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை கோர்ட்டு ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
    வேலூர்:

    வேலூர் அடுத்த அரியூர் அருகே உள்ள பூதூரை சேர்ந்தவர் ரமேஷ்பாபு. இவருடைய மகன் நரேஷ்குமார் (வயது 27), சென்னையில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார்.

    கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அன்று சென்னையில் இருந்து வேலூர் வந்த அவர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மோட்டார்சைக்கிளில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்துல்லாபுரம் அருகே சென்றபோது வேலூரில் இருந்து பெங்களூரு சென்ற அரசு பஸ் நரேஷ்குமார் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் நரேஷ்குமாரின் பெற்றோர் ரூ.20 லட்சம் இழப்பீடு கேட்டு வேலூர் மாவட்ட கூடுதல் அமர்வுநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி வெற்றிச்செல்வி ரூ.18 லட்சத்து 18 ஆயிரம் இழப்பீடு வழங்க 27.4.2016 அன்று உத்தரவிட்டார். ஆனால் குறிப்பிட்ட தேதியில் இழப்பீடு வழங்கவில்லை.

    அதைத்தொடர்ந்து மீண்டும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்து இழப்பீடு வழங்காததால் தர்மபுரி பணிமனையை சேர்ந்த 3 பஸ்களை ஜப்திசெய்ய அவர் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் வக்கீல் கண்ணன் தலைமையில் கோர்ட்டு அமீனா மற்றும் நரேஷ்குமாரின் குடும்பத்தினர் வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு சென்றனர்.

    அப்போது அங்கு தர்மபுரி பணிமனையை சேர்ந்த ஒரு பஸ்மட்டும் நின்றது. அந்த பஸ்சை ஜப்திசெய்து கோர்ட்டுக்கு கொண்டுசென்றனர்.
    Next Story
    ×