search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்பத்தூரில் டிரைவரை தாக்கி ‘கால்டாக்சி’ கடத்தல்
    X

    அம்பத்தூரில் டிரைவரை தாக்கி ‘கால்டாக்சி’ கடத்தல்

    அம்பத்தூரில் டிரைவரை தாக்கிய கடத்தல் கும்பல் காரை கடத்தி சென்ற சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வில்லிவாக்கம்:

    வியாசர்பாடி, பி.வி. காலனி 3-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சாகுல் அமீது தனியார் கால் டாக்சி டிரைவர்.

    நேற்று இரவு அவர் அம்பத்தூரில் சவாரியை இறக்கிவிட்டார். பின்னர் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் நிலையம் அருகே சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டு அதன் உள்ளேயே தூங்கினார்.

    நள்ளிரவு 2 மணியளவில் 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் சாகுல் அமீது விடம் “உறவினர் ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளார். அவரை தாம்பரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும் என்று கூறி அழைத்து சென்றனர். அம்பத்தூர் ஓ.டி. பஸ் நிலையம் அருகே சென்ற போது திடீரென 3 வாலிபர்களும் டிரைவர் சாகுல் அமீதை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை கீழே தள்ளிவிட்டு காரை கடத்தி சென்று விட்டனர்.

    அதிர்ச்சி அடைந்த சாகுல் அமீது இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் நிலையம் அருகே கடத்தல் கும்பல் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் அனாதையாக நின்றது.

    அதனை கைப்பற்றி கார் கடத்தல் கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×