search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிப்மர் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் தொடங்கியது
    X

    ஜிப்மர் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் தொடங்கியது

    புதுவை ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சிலிங் இன்று தொடங்கியது.
    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு கடந்த 4-ந்தேதி நாடு முழுவதும் நடந்தது. இதில் ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 369 மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் கடந்த 9-ந் தேதி வெளியானது. 150 மாணவர்கள் ஜிப்மர் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்களுக்கான கவுன்சிலிங் இன்று தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று கவுன்சிலிங் தொடங்கியது.

    முன்னதாக இன்று காலை ஜிப்மர் நிர்வாக அலுவலகத்தில் சான்றிதழ் சரி பார்க்கும் பணி நடந்தது. இன்று மதியம் கவுன்சிலிங் நடந்தது. முதல்கட்டமாக பொதுப்பிரிவு, மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடந்தது.

    நாளை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும், 30-ந்தேதி புதுவை மாணவர்களுக்கும் கவுன்சிலிங் நடக்கிறது.
    Next Story
    ×