search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coin"

    • வினித் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது கையில் வைத்திருந்த 5 ரூபாய் நாணயம் எதிர்பாராத விதமாக முழுங்கியுள்ளார்.
    • தொண்டை பகுதியில் சிக்கிக்கொண்டதால் அறுவை சிகிச்சை செய்யாமல் அப்புறப்படுத்த முயற்சி செய்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் மிட்டப்பள்ளி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த சிவா-விஜய பிரியா தம்பதியரின் 10 வயது குழந்தை வினித் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது கையில் வைத்திருந்த 5 ரூபாய் நாணயம் எதிர்பாராத விதமாக முழுங்கியுள்ளார்.

    இதனை கண்ட அவரது உறவினர்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது தொண்டை பகுதியில் 5 ரூபாய் நாணயம் சிக்கி இருந்தது உறுதி செய்தனர்.

    தொண்டை பகுதியில் சிக்கிக்கொண்டதால் அறுவை சிகிச்சை செய்யாமல் அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். இதையடுத்து குறித்த நேரத்தில் சிறுவன் முழுங்கிய நாணயத்தை அப்புறப்படுத்தினார்.

    இந்த சிகிச்சையில் மருத்துவர்கள் மதன்குமார், காது மூக்கு, தொண்டை மருத்துவர் செந்தில், மயக்கவியல் நிபுணர் மருத்துவர் சதீஷ்குமார் ஆகியோருக்கு சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் பொதுமக்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

    • மெட்டல் டிடெக்டர் மூலம் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் இருந்து நாணயங்களை கண்டெடுத்துள்ளார்.
    • மகளுக்காக டி.வி. வாங்க வேண்டியிருந்தது என்றார்.

    சிலி நாட்டில் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நாணயங்களை கொண்டு ஒருவர் டி.வி. வாங்கியுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

    டிக்டாக் பிரபலம் லூயிஸ் அல்வெரெஸ் என்பவர் மெட்டல் டிடெக்டர் மூலம் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் இருந்து நாணயங்களை கண்டெடுத்துள்ளார்.

    ஒரு வாரத்திற்குள் கண்டெடுக்கப்பட்டுள்ள நாணயங்களை கொண்டு இந்திய மதிப்பில் ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள டி.வி.யை வாங்கியுள்ளார். இது தொடர்பாக லூயில் அல்வெரெஸ் கூறும் போதும், ஒவ்வொரு வாரமும் 210 அமெரிக்க டாலர் முதல் 263 டாலர் வரை கிடைக்கும். என்னுடைய மகளுக்காக டி.வி. வாங்க வேண்டியிருந்தது. சேகரித்த நாணயங்களை இரவு முழுவதும் சுத்தம் செய்தேன். வெகுநேரமாகியதால் வங்கிக்கு செல்ல முடியவில்லை. அதனால் மறுநாள் நாணயங்களை சிறிய பையில் வைத்து எடுத்துச் சென்றேன் என்றார். 

    • இந்த எந்திரங்களில் ரூ.5 நாணயம் செலுத்தினால் 1 லிட்டர் தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம்.
    • ஒரு ரூபாய்க்கு குடிநீர் வழங்கும் திட்டம் அமலில் இருந்தபோது பயணிகள் தண்ணீருக்காக செலவு செய்யும் தொகை குறைவாகவே இருந்தது.

    தஞ்சாவூர்:

    இந்தியாவில் ரெயில் போக்குவரத்திற்கு என்று தனி இடம் உண்டு. ரெயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறைந்த கட்டணத்தில் நீண்ட நேரம் பயணம் செய்யலாம் என்பதாலும் அசதியாக இருக்காது என்பதாலும் பெரும்பாலான மக்கள் ரெயில் போக்குவரத்தையே விரும்புகின்றனர். இதனால் ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இலவச வைபை வசதி, நகரும் படிக்கட்டு என்பது உள்ளிட்ட பல்வேறு கூடுதல் வசதிகளை ரெயில்வே நிர்வாகம் செய்துள்ளது.

    அந்த வகையில் ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் இணைந்து ரெயில் நிலையங்களில் ஒரு ரூபாய்க்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் தொடங்கியது. இந்தத் திட்ட மூலம் ஒரு ரூபாய்க்கு சுத்தமான 300 மி.லி. குடிநீர், ரூ.5-க்கு ஒரு லிட்டர் குடிநீர் வழங்கி வந்தது. கடந்த 2016-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்திற்கு பயணிகளிடையே பெரும் வரவேற்பு இருந்தது.

    தமிழகத்தில் தஞ்சாவூர், திருச்சி, சென்னை ,மதுரை உள்ளிட்ட பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில் இந்தத் திட்டம் அமலில் இருந்தது.

    இதில் குடிநீரை சுத்திகரித்து வழங்கும் எந்திரங்கள் நடைமேடையில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் நிற்கும் இடத்தின் அருகே நிறுவப்பட்டு உள்ளது.

    தஞ்சை ரயில் நிலையத்தில் இரண்டு இடங்களில் இந்த எந்திரங்கள் நிறுவப்பட்டு உள்ளது. இந்த எந்திரங்களில் ரூ.1 நாணயம் செலுத்தினால் 300 மி.லி‌. தண்ணீர் பிடித்துக் கொள்ளலாம். அதேபோல் ரூ.5 நாணயம் செலுத்தி

    1 லிட்டர் தண்ணீர் பிடிக்கலாம்.

    குறைந்த விலைக்கு தண்ணீர் கிடைத்ததால் பயணிகள் மத்தியில் வரவேற்பு இருந்தது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக இந்தத் திட்டம் செயல்படாமல் முடங்கியது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வேறு வழியின்றி கூடுதல் விலை கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இது குறித்து பயணிகள் தரப்பில் கூறும் போது:-

    தஞ்சை ரெயில் நிலையத்தில் ஒரு ரூபாய்க்கு குடிநீர் வழங்கும் திட்டம் அமலில் இருந்தபோது பயணிகளுக்கு தண்ணீருக்காக செலவு செய்யும் தொகை குறைவாக இருந்தது. எந்திரத்தில் ரூ.1 நாணயம் செலுத்தி தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வந்தோம். மேலும் குளிர்ச்சியான நீரும் வழங்கப்பட்டதால் கோடை காலங்களில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த திட்டம் செயல்படாமல் உள்ளது. இதனால் தஞ்சை ரயில் நிலையத்தில் குடிநீர் திட்ட எந்திரம் காட்சி பொருளாக மாறி உள்ளது. பயணியிலேயே வரவேற்பை பெற்றிருந்த இந்த திட்டம் முடங்கியது வேதனை அளிக்கிறது. எனவே காலம் தாமதிக்காமல் மீண்டும் ஒரு ரூபாய் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ரயில்வே நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    பொதுவாக, குளங்களிலும் நீர்நிலைகளிலுல் நாம் காசுகளைப் (நாணயங்களை) போடுவோம். இப்பழக்கம் தொன்று தொட்டே நம்மிடம் இருக்கிறது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    பொதுவாக, குளங்களிலும் நீர்நிலைகளிலுல் நாம் காசுகளைப் (நாணயங்களை) போடுவோம். இப்பழக்கம் தொன்று தொட்டே நம்மிடம் இருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று கேட்டால், அவ்வாறு செய்வதால் ஆகூழ் (அதிர்ஷ்டம்) வந்து சேரும் என்று கூறுவார்கள். உண்மையில் இதன் பின்னால் ஓர் அறிவியல் கூறு மறைந்திருக்கிறது. இப்பொழுது, துருப்பிடிக்கா எஃகால் செய்யப்படும் காசுகள் போல் அல்லாமல், முற்காலத்தில் காசுகள் செம்புகளால் தான் செய்யப்பட்டன. செம்பு நம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒரு கனிமம் ஆகும்.

    செம்பு தாது குறைபாடால் மூட்டுவலி, மாரடைப்பு என்று பல கோளாறுகள் ஏற்படும். எனவே, நம் முன்னோர்கள் செம்பு காசுகளை குளங்களில் போட்டனர். செம்புக் காசுகளில் இருக்கும் செம்பு அணுக்கள் நீருடன் கலக்கும், அதைக் குடிக்கும் மக்கள் உடலுக்கும் செம்பு தாது சேரும். முற்காலத்தில் குளத்து நீர்தான் ஊர்மக்கள் எல்லாருக்கும் குடிநீராகப் பயன்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதே பழக்கம் நாளடைவில் பொருளிழந்து தற்பொழுது நாமும் துருப்பிடிக்கா எஃகால் ஆன காசுகளைக் குளங்களில் போடுகிறோம்.

    பின்னர், கனிமநீரை (mineral water) வாங்கி அருந்துகிறோம்.

    செம்பு குடங்களில் நீரைப் வைத்து அருந்துவது சிறப்பு. செம்பு நீர், புற்றுநோயைத் தவிர்க்கும் பண்புடையதாக அறிவியல் உலகம் கூறுகிறது.
    ×