search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாணயம்"

    • என்.டி. ராமராவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய அரசு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட முடிவு செய்தது.
    • விழாவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜூனியர் என்.டி.ஆர், கல்யாணராம் கலந்து கொள்கின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் பிரபல நடிகரும், முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ராமராவ் நூற்றாண்டு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    என்.டி. ராமராவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய அரசு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட முடிவு செய்தது.

    அதன்படி 44 மில்லி மீட்டர் சுற்றளவு கொண்ட நாணயம் தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் 50 சதவீதம் வெள்ளியும், 40 சதவீதம் செம்பு, 5 சதவீதம் துத்தநாகம், 5 சதவீதம் நிக்கல் கலந்து செய்யப்பட்டு உள்ளது.

    நாணயத்தின் ஒரு புறத்தில் 3 சிங்கங்களுடன் அசோக சக்கரமும், மறுபுறத்தில் என்.டி.ஆர். ராமராவ் உருவம் பதித்து, அதன் கீழ் இந்தியில் நாதமுரி தாரக ராமராவ் சத்ஜெயந்தி 1923-2023 என அச்சிடப்பட்டுள்ளது.

    நாணய வெளியிட்டு விழா நாளை மறுநாள் நடக்கிறது.

    டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிடுகிறார்.

    நாணய வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள என்.டி.ராமராவின் மகன்கள், மகள்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    விழாவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜூனியர் என்.டி.ஆர், கல்யாணராம் கலந்து கொள்கின்றனர்.

    • கோவில் கொடிமரம் அருகே திருஞானசம்பந்தர் எழுந்தருள, ஓதுவார்கள் உலவாக்கிழி பதிகம் பாடினர்.
    • பக்தர்களுக்கு சாமியிடம் வைத்து பூஜிக்கப்பட்ட நாணயங்களை குரு மகா–சன்னிதானம் பிரசாதமாக வழங்கினார்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, திருவாவடுதுறையில் தேவாரபாடல் பெற்ற திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றிலும் சிறப்புடைய அதுல்ய குஜாம்பிகை உடனாகிய கோமுக்தீஸ்வரர் கோவில் உள்ளது.

    ஆண்டுதோறும், இக்கோவிலில் தை ரதசப்தமி விழாவின் 5-ஆம் நாள் திருஞானசம்பத்திற்கு இறைவன் பொற்கிழி அளிக்கும் ஐதீக நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்தாண்டு ரதசப்தமி விழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 5-ஆம் நாளான நேற்று பொற்கிழி அளிக்கும் ஐதீக விழா நடைபெற்றது.

    விழாவையொட்டி கோவில் கொடிமரம் அருகே திருஞானசம்பந்தர் எழுந்தருள, ஓதுவார்கள் உலவாக்கிழி பதிகத்தை பாடினர். தொடர்ந்து சாமி சன்னதியில் இருந்து பூதகனம் பொற்கிழியை சுமந்து வந்து பீடத்தில் வைத்தது.

    இதனை அடுத்து திருஞானசம்பந்தருக்கு சாமி பொற்கிழி வழங்கும் ஐதீக நிகழ்வு திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திருமுறை இசை அறிஞர் 4 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் அடங்கிய பொற்கிழியை குருமகா சன்னிதானம் அளித்து ஆசியுரை வழங்கினார்.

    தொடர்ந்து, பக்தர்களுக்கு சாமியிடம் வைத்து பூஜிக்கப்பட்ட நாணயங்களை குரு மகா–சன்னிதானம் பிரசாதமாக வழங்கினார்.

    விழாவில் ஆதீன கட்டளை தப்பிரான்கள், ஆதீன கண்காணிப்பாளர் சண்முகம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • 14 வகையான 10 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளது என்ற விவரங்கள் பத்திரிக்கை மூலமாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தாராபுரம் :

    அரசு பஸ்களில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) பொது மேலாளர், திருப்பூர் மண்டல அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களை சேர்ந்த பஸ்களில் பயணிகள் பயணம் செய்யும் போது, பயண சீட்டை பெற்றுக் கொண்டு கட்டண தொகை கொடுக்கும் போது, நடத்துனர்கள் 10 ரூபாய் நாணயத்தை பெற மறுக்கின்றனர் என, சென்னை இந்திய ரிசர்வ் வங்கி துணை பொது மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை 14 வகையான 10 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளது என்ற விவரங்கள் பத்திரிக்கை மூலமாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள் அனைத்தும் சட்ட பூர்வமானவை.

    எனவே இனி வருகிற காலங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) லிமிடெட் திருப்பூர் மண்டல பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் பயண சீட்டு கட்டணம் கொடுக்கும் போது, 10 ரூபாய் நாணயம் கொடுத்தால் அதனை மறுக்காமல் நடத்துனர்கள் பயண சீட்டு கொடுக்க வேண்டும். 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அனைத்து கிளை மேலாளர்களும் தகவல் பலகை மூலமாக இந்த தகவலை அனைத்து நடத்துனர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். மேலும் இதுபோன்ற புகார்கள் பொதுமக்களிடம் இருந்து வராத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள சேரர், சோழர் காலத்து நாணயங்கள் உள்ளன.
    • 100 ஆண்டுகள் பழமையான சாவிகள், எடை கற்கள் 18-ம் நூற்றாண்டு பொற்காசுகள் ஆகியவைகளும் உள்ளன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி ப.கொந்தகையில் உள்ள தனியார் மண்டபத்தில் திருச்சி ராக்போர்ட் ஈவன்ட் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி மற்றும் நாணயக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

    இந்நிகழ்ச்சி கடந்த 5-ம் தேதி தொடங்கி வரும் 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த கண்காட்சியில் தலைவர்களின் மணல் சிற்பம், கலைஞர் கருணாநிதியின் சிறு வயது முதல் தற்போது வரை உள்ள புகைப்பட கண்காட்சி, 2000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள சேரர், சோழர் காலத்து நாணயங்கள் 150 ஆண்டுகள் பழமையான சூடு மண் பானைகள், 100 ஆண்டுகள் பழமையான சாவிகள், எடை கற்கள் 18-ம் நூற்றாண்டு பொற்காசுகள்,

    பல்வேறு நாடுகளின் கரன்சிகள், கடல் வாழ் உயிரினங்களின் கல் படிமங்கள், சுண்ணாம்புக் குடுவைகள் ஆகிய கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.மேலும் வரைபட கண்காட்சி, தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறுவர் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இதில் இடம் பெற்றுள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை திருச்சி ராக்போர்ட் ஈவன்ட் சார்பில் அதன் நிர்வாகி ஜெய் கணேஷ் தலைமையில் நிர்வாகிகள் சகுந்தலாதேவி, பழனிவேல் சரத்குமார், செல்வம் ஆகியோர் செய்து வருகின்றனர்.கண்காட்சிக்கு தினமும் 1000-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு சென்று வருகின்றனர்.

    • இந்த எந்திரங்களில் ரூ.5 நாணயம் செலுத்தினால் 1 லிட்டர் தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம்.
    • ஒரு ரூபாய்க்கு குடிநீர் வழங்கும் திட்டம் அமலில் இருந்தபோது பயணிகள் தண்ணீருக்காக செலவு செய்யும் தொகை குறைவாகவே இருந்தது.

    தஞ்சாவூர்:

    இந்தியாவில் ரெயில் போக்குவரத்திற்கு என்று தனி இடம் உண்டு. ரெயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறைந்த கட்டணத்தில் நீண்ட நேரம் பயணம் செய்யலாம் என்பதாலும் அசதியாக இருக்காது என்பதாலும் பெரும்பாலான மக்கள் ரெயில் போக்குவரத்தையே விரும்புகின்றனர். இதனால் ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இலவச வைபை வசதி, நகரும் படிக்கட்டு என்பது உள்ளிட்ட பல்வேறு கூடுதல் வசதிகளை ரெயில்வே நிர்வாகம் செய்துள்ளது.

    அந்த வகையில் ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் இணைந்து ரெயில் நிலையங்களில் ஒரு ரூபாய்க்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் தொடங்கியது. இந்தத் திட்ட மூலம் ஒரு ரூபாய்க்கு சுத்தமான 300 மி.லி. குடிநீர், ரூ.5-க்கு ஒரு லிட்டர் குடிநீர் வழங்கி வந்தது. கடந்த 2016-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்திற்கு பயணிகளிடையே பெரும் வரவேற்பு இருந்தது.

    தமிழகத்தில் தஞ்சாவூர், திருச்சி, சென்னை ,மதுரை உள்ளிட்ட பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில் இந்தத் திட்டம் அமலில் இருந்தது.

    இதில் குடிநீரை சுத்திகரித்து வழங்கும் எந்திரங்கள் நடைமேடையில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் நிற்கும் இடத்தின் அருகே நிறுவப்பட்டு உள்ளது.

    தஞ்சை ரயில் நிலையத்தில் இரண்டு இடங்களில் இந்த எந்திரங்கள் நிறுவப்பட்டு உள்ளது. இந்த எந்திரங்களில் ரூ.1 நாணயம் செலுத்தினால் 300 மி.லி‌. தண்ணீர் பிடித்துக் கொள்ளலாம். அதேபோல் ரூ.5 நாணயம் செலுத்தி

    1 லிட்டர் தண்ணீர் பிடிக்கலாம்.

    குறைந்த விலைக்கு தண்ணீர் கிடைத்ததால் பயணிகள் மத்தியில் வரவேற்பு இருந்தது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக இந்தத் திட்டம் செயல்படாமல் முடங்கியது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வேறு வழியின்றி கூடுதல் விலை கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இது குறித்து பயணிகள் தரப்பில் கூறும் போது:-

    தஞ்சை ரெயில் நிலையத்தில் ஒரு ரூபாய்க்கு குடிநீர் வழங்கும் திட்டம் அமலில் இருந்தபோது பயணிகளுக்கு தண்ணீருக்காக செலவு செய்யும் தொகை குறைவாக இருந்தது. எந்திரத்தில் ரூ.1 நாணயம் செலுத்தி தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வந்தோம். மேலும் குளிர்ச்சியான நீரும் வழங்கப்பட்டதால் கோடை காலங்களில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த திட்டம் செயல்படாமல் உள்ளது. இதனால் தஞ்சை ரயில் நிலையத்தில் குடிநீர் திட்ட எந்திரம் காட்சி பொருளாக மாறி உள்ளது. பயணியிலேயே வரவேற்பை பெற்றிருந்த இந்த திட்டம் முடங்கியது வேதனை அளிக்கிறது. எனவே காலம் தாமதிக்காமல் மீண்டும் ஒரு ரூபாய் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ரயில்வே நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×