search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உண்மையான பிரச்சனையில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புகிறார்- பிரதமர் மீது பிரியங்கா குற்றச்சாட்டு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    உண்மையான பிரச்சனையில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புகிறார்- பிரதமர் மீது பிரியங்கா குற்றச்சாட்டு

    • விலைவாசி உயர்வு, மக்களை பாதிக்கும் பிற பிரச்சனைகளுக்கு தீர்வு காண பிரதமர் தவறிவிட்டார்.
    • அதற்குப் பதிலாக பொருத்தமற்ற விசயத்தில் கவனம் செலுத்துகிறார். பாஜக ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு நாளை மறுதினம் (ஏப்ரல் 26-ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இன்று மாலை ஆறு மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைய இருப்பதால் நட்சத்திர தலைவர்கள் கேரளாவை முற்றுகையிட்டு இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி இன்று கேரளாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது பிரியங்கா காந்தி கூறியதாவது:-

    பிரதமர் மோடி மக்களுக்காக ஏதும் செய்யவில்லை. உண்மையான பிரச்சனையில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார். விலைவாசி உயர்வு, மக்களை பாதிக்கும் பிற பிரச்சனைகளுக்கு தீர்வு காண பிரதமர் தவறிவிட்டார். அதற்குப் பதிலாக பொருத்தமற்ற விசயத்தில் கவனம் செலுத்துகிறார். பாஜக ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    இந்த மக்களவை தேர்தல் இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் அரசமைப்பை பாதுகாப்பதற்கான வாய்ப்பு. முன்னேற்றம் குறித்து அவர்கள் பேசமாட்டார்கள். உண்மையான பிரச்சனை குறித்து அவர்கள் பேசமாட்டார்கள். பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 10 ஆண்டுகளாக கடுமையாக அதிகரித்தது. அதேபோல் வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்துள்ளது.

    இவ்வாறு பிரயங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×