search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிட்டன் நாட்டில் கடுமையான பனிப்பொழிவு: விமானம், ரெயில் சேவைகள் முடக்கம்
    X

    பிரிட்டன் நாட்டில் கடுமையான பனிப்பொழிவு: விமானம், ரெயில் சேவைகள் முடக்கம்

    பிரிட்டன் நாட்டின் சில பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நீடிப்பதால் விமானம் மற்றும் ரெயில் சேவைகள் முடங்கின. லண்டனில் இன்று நடைபெறவிருந்த ரக்பி விளையாட்டு போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    லண்டன்:

    பிரிட்டன் நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய இங்கிலாந்து பகுதியில்  விமானம், ரெயில் மற்றும் சாலைவழி போக்குவரத்து பாதிக்கப்பட்டது,

    வேல்ஸ் அருகாமையில் இருக்கும் சென்னிபிரிட்ஜ் பகுதியில் 28 சென்டிமீட்டர் அளவிலும், லண்டன் அருகாமையில் உள்ள ஹை வைகோம்பே பகுதியில் 12 சென்டிமீட்டர் அளவிலும் பனி பெய்துள்ளது.

    இங்கிலாந்தின் மத்திய பகுதியில் உள்ள பிர்மிங்ஹம் நகரில் இருந்து புறப்பட்டு செல்லும் பத்துக்கும் அதிகமான விமான சேவைகள் மற்றும் சில ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல ரெயில்கள் தாமதமாக வந்து செல்கின்றன.

    மைதானத்தை பனி சூழ்ந்துள்ளதால் லண்டன் நகரில் இன்று நடைபெறவிருந்த ரக்பி விளையாட்டு போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×