search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    கோவையில் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குபோட்டு தற்கொலை

    கோவையில் இன்று 10-ம் வகுப்பு மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை ரத்னபுரியை சேர்ந்தவர் தமிம். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ஜாபர் (15). இவர் கோவை ராம் நகரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். காலை 11 மணிக்கு வீட்டிற்கு வந்தார்.

    திடீரென வீட்டின் அறை கதவை பூட்டி கொண்டார். வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் சத்தம் போட்டார்.

    இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    அப்போது அங்கு ஜாபர் மின் விசிறியில் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.

    பள்ளிக்கு சென்ற மாணவர் ஏன் வீட்டிற்கு திரும்பி வந்து தற்கொலை செய்தார். பள்ளியில் ஆசிரியர் திட்டினார்களா? அல்லது சக மாணவர்கள் ஏதாவது டார்ச்சர் செய்தார்களா? என்ற கோணத்தில் ரத்னபுரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

    Next Story
    ×