search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி விமான நிலையத்திற்கு ரூ.7லட்சம் தங்கத்தை கடத்தி வந்த பயணி
    X

    திருச்சி விமான நிலையத்திற்கு ரூ.7லட்சம் தங்கத்தை கடத்தி வந்த பயணி

    லேப்-டாப், செல்போன் சார்ஜரில் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்த பயணி திருச்சி விமான நிலையத்தில் சிக்கினார்.
    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், உள்நாட்டில் சென்னைக்கும் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் தினமும் ஏராளமானோர் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் அதிகாரிகளின் தீவிர சோதனைக்கு பிறகே அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் பயணிகள் பலரிடம் இருந்து பல கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்றிரவு சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு தனியார் விமானம் வந்தது. அதில் வந்திறங்கிய பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சென்னையை சேர்ந்த சையது உதுமான் என்பவரின் உடைமைகளை சோதனை செய்த போது, அவர் வைத்திருந்த லேப்டாப் மற்றும் செல்போன் சார்ஜரில் 250 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.7 லட்சம் இருக்கும். அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், தங்கத்தை கடத்தி வந்தது தொடர்பாக சையது உதுமானிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×